அஞ்சலோ மெத்தீவ்ஸ் இலங்கை கிரிக்கட் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான தலைவராக தொடர்ந்தும் செயற்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா கிரிக்கட் இதனைத் தெரிவித்துள்ளது.
அதேநேரம் 20க்கு20 அணிக்கான தலைவராக லசித் மலிங்க செயற்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இங்கிலாந்துடான கிரிக்கட் தொடர் நிறைவடையும் வரையில், அஞ்சலோ மெத்தீவ்ஸ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் தலைவராக செயற்படுவார்.
அதேநேரம், 2016ம் ஆண்டு உலக கிண்ண 20க்கு20 போட்டிகள் வரையில் லசித் மலிங்க 20க்கு20 அணிக்கான தலைவராக செயற்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment