Latest News

May 29, 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடு யாழில்
by admin - 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
வட­மா­காண சபை விவ­கா­ரங்கள் தொடர் பில் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் யாழ் மாவட்ட அமைப்­பா­ளரும் வட­மா­காண சபை உறுப்­பி­ன­ரு­மான அங்­கஜன் இரா­ம­நா­த­னுடன் கடந்த திங்­கட்­கி­ழமை ஆலோ­சனை நட­த்­திய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் விசேட மாநாடு ஒன்றை ஜூன் மாத நடுப்­ப­கு­தியில் யாழ்ப்­பா­ணத்தில் நடத்­து­வது குறித்தும் ஆராய்ந்­துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மாவட்ட தலை­வர்கள் கூட்டம் கடந்த திங்­கட்­கி­ழமை மாலை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நடை­பெற்­றது. இந்த கலந்­து­ரை­யா­டலில் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் அனைத்து மாவட்ட தலை­வர்­களும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

இங்கு உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பாரா­ளு­மன்றம் ஜூன் மாதம் இரண்டாம் வார­ம­ள­வில் கலைக்­கப்­பட்டு ஆகஸ்ட் மாத இறு­திப்­ப­கு­தியில் தேர்தல் நடத்­தப்­படும் என தெரி­வித்­தி­ருந்­தார்.

இதற்­காக கட்­சியை தயார்­ப­டுத்த வேண்­டிய தேவை மாவட்ட தலை­வர்­க­ளுக்கே உள்­ளது என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்­டுள்ளார். இந்­நி­லையில் இந்த கலந்­து­ரை­யா­டலின் முடிவில் சுதந்­திரக் கட்­சியின் யாழ்.மாவட்ட அமைப்­பாளர் அங்­க­ஜனை அழைத்து பேசிய ஜனா­தி­பதி வட­மா­காண சபையின் பிரச்­சி­னைகள் உட்­பட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் உரை­யா­டி­யுள்ளார்.
இதன்­போது ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மாநாட்டை ஜூன் மாத நடுப்­ப­கு­தியில் யாழ்ப்­பா­ணத்தில் நடத்­து­வது குறித்தும் அங்­க­ஜ­னுடன் ஜனா­தி­பதி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் தேசிய அளவில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments