Latest News

May 16, 2015

கிழக்கு பல்கலை.யில் தமிழில் தேசியகீதம்! உத்தியோகத்தர் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல்!
by admin - 0


மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தமிழ் மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்த சிங்கள மாணவர்கள் பலர் அரச உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தமிழ் மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்த சிங்கள மாணவர்கள் பலர், ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் உத்தியோகத்தர் ஒருவர் மீது சரிமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். 
தாக்குதலில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 
பத்தக்குட்டி சுமன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சிங்கள மாணவர்களின் தாக்குதலில் படுகாயமடைந்து செங்கலடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
« PREV
NEXT »

No comments