மே-18 தமிழீழத் தேசிய நாளினை மையப்படுத்தி அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் Ramsey Clark பங்கெடுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
கனடா தமிழகம் ஆகிய இடங்களில் தமிழீழத் தேசிய துக்க நாளின் பிரதான நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்காவில் இவ்நினைவுப் பேருரை நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.
இவ்வாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டுகளிலும் உலகின் முக்கிய பிரமுகர்கள் பங்கெடுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நிகழ்வு நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே18ம் நாள் திங்கட்கிழமை நியூ யோர்க்கில் அமைந்துள்ள இடத்தில் மாலை 6:30 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதேவேளை மே12ம் நாள் செவ்வாய்கிழமை தொடங்கப்பட்ட நினைவேந்தல் வாரத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் உணர்வுபூர்வமாக அமெரிக்காவில் தொடங்கி வைத்தார் என பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment