முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்று 06 மணி நேரம் விசாரணைகளை நடத்தியுள்ளது.
காலை 9.30 மணிக்கு புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்த அவர் பிற்பகல் 3.20 மணிவரைக்கும் அங்கு விசாரிக்கப்பட்டிருக்கிறார். அவரிடம் வாக்கு மூலமும் பெறப்பட்டிருக்கிறது.
2006 ஆம் ஆண்டு விமானப்படைக்கு நான்கு மிக் 27 ரக விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி, லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தில் பங்குகளை விற்பனை செய்ததாக கூறப்படும் விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment