Latest News

April 18, 2015

காணிகள் விடு­விக்­கப்­பட்­டாலும் வீதிகள் இரா­ணு­வக் கட்­டுப்­பாட்­டி­லேயே உள்­ளன ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கவனம் செலுத்­த­வேண்டும் என்­கிறார் சுரேஷ் எம்.பி.
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya
வலி.வடக்கில் 1000 ஏக்கர் காணி கள் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­பட்­டாலும் மக்­க­ளுக்குத் தேவை­யான வீதி­களை இரா­ணுவம் தமது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­துள்­ளது. இதனால் மக்கள் மீளக் குடி­யே­றி­னாலும் கூட போக்­கு­வ­ரத்து செய்ய முடி­யாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. இது தொடர்பில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஏனைய அரச ஊழி­யர்­களும் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என ஊட­கங்கள் ஊடாக கோரு­வ­தா­க­ தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

இரா­ணு­வத்­தினர் தமது எல்­லை­களை நகர்த்தி புதிய எல்­லை­களை அமைக்­கும்­போது தமக்கு ஏற்­ற­வாறு எல்­லை­களை போட்டு வரு­கின்­றார்கள் என்றும் அவர் குற்­றம்­சாட்­டி­யுள்ளார்.

வலி.வடக்கில் மக்கள் மீளக்­கு­டி­யேற அனு­ம­திக்­கப்­பட்ட பகு­தி­களை நேற்றுமுன்­தினம் வியா­ழக்­கி­ழமை பார்­வை­யிட்ட பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்க­ளுக்கு கரு­த்து தெரிவிக்­கை­யி­லேயே அவர் இந்த வேண்­டு­கோளை விடுத்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

அர­சாங்­கத்தின் நூறு நாள் வேலைத்­திட்­டத்தின் கீழ் வலி­காமம் வடக்குப் பகு­தியில் ஆயிரம் ஏக்கர் நிலப்­ப­ரப்பு விடு­விக்­கப்­ப­டு­வ­தாக கூறப்­பட்­டது. ஆனால் இது முழு­மை­யாக விடு­விக்­கப்­ப­ட­வில்லை. விடு­விக்­கப்­பட்ட பகு­தி­யிலும் கூட இரண்டு பாரிய இரா­ணுவ முகாம்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இந்த இரா­ணுவ முகாம்கள் சுமார் நூறு ஏக்கர் பரப்பில் உள்­ள­துடன் இரண்டு முகாம்­களும் காணப்­ப­டு­கின்­றன. இத­னையும் உள்­ள­டக்­கியே காணிகள் விடு­விக்­கப்­ப­டு­வ­தாக அர­சாங்கம் கூறு­கின்­றது.

ஆகவே, அந்த முகாம்கள் அகற்­றப்­பட்டால் தான் இந்தப் பகு­தியில் மக்கள் மீளக்­கு­டி­யேற முடியும். குறிப்­பாக இந்த காணி­களின் உரி­மை­யா­ளர்கள் உரும்­பிராய் கோப்பாய் பகு­தி­க­ளில உள்ள தற்­கா­லிக முகாம்­களில் தற்­போது வாழ்ந்து வரு­கின்­றார்கள். அவர்கள் இங்கு வந்து மீளக் குடி­யேற வேண்­டு­மாக இருந்தால் இந்தப் பகு­தி­களில் உள்ள இரா­ணுவ முகாம்கள் அகற்­றப்­பட்டு அந்த மக்கள் மீளக்­கு­டி­யேற அனு­ம­திக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இரா­ணுவ முகாம்கள் அமைக்­கப்­பட்ட பகு­தி­யையும் உள்­ள­டக்­கியே உயர் பாது­காப்பு வல­யத்தில் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் இன்றும் கூட இரா­ணு­வத்­தினர் தமது எல்­லை­களை நகர்த்தி புதிய எல்­லை­களை அமைக்­கும்­போது தமக்கு ஏற்­ற­வாறு எல்­லை­களை போட்டு வரு­கின்­றார்கள்.

குறிப்­பாக இந்த எல்லை வேலிகள் போடும் விட­யத்தில் இரா­ணுவம் தமது விருப்­பத்­தி­ற்கு ஏற்ப வேலி­களை அமைப்­ப­தினால் மக்கள் உரிய முறையில் குடி­யேற முடி­யாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக காணிகள் விடப்­படும் போது மல­ச­ல­கூடம் மக்­க­ளி­டமும் வீடுகள் உயர் பாது­காப்­பு­ வ­ல­யத்­திலும் இருக்­கின்ற வகை­யிலும் தோட்­டங்கள் இரா­ணுவ முகாம்­க­ளுக்­குள்ளும் வீடுகள் வெளி­யிலும் இருக்கும் வகை­யிலும் காணி­களின் வேலி­களை இரா­ணுவம் அமைத்து வரு­கின்­றது.

இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை இரா­ணுவம் தான்­தோன்­றித்­த­ன­மாக மேற்­கொண்ட வரு­கின்­றது. இது தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சரும் ஏனைய உயர் அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும்.

உரிய முறையில் காணிகள் விடுவிக்கப்படு கின்றனவா? என்பது தொடர்பில் அரச அலுவலர்களும் மீள்குடியேற்ற அமைச்ச ரும் கவனம் செலுத்த வேண்டியது அவசிய மாகும். இதனைவிடுத்து ஆயிரம் ஏக்கர் காணி விடப்பட்டுள்ளது என்று கூறுவதில் எந்தவகையான பிரயோசனமும் இல்லை என்றார்.
« PREV
NEXT »

No comments