Latest News

April 21, 2015

சம்பூர் மக்கள் குடியேறுவது தாமதமாவது ஏன் மக்கள் கேள்வி
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, சம்பூர்
ஏப்ரல் 30ஆம் திக­திக்கு முன்னர் சம்பூர் மக்கள் மீள் குடி­யேற்றம் செய்­யப்­ப­டுவர் என கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்­டோவும், மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் சுவா­மி­நா­தனும், பிர­தமர் ரணில் விக்­க­ர­ம­சிங்­கவும் உறு­தி­ய­ளித்து அதனை கிழக்கு மாகா­ண­சபை தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்­களும், சம்பூர் மக்­களும் நம்­பினர்.

அதற்­காக பிர­த­மரும், அமைச்­சரும், ஆளு­நரும் சம்­பூ­ருக்குச் சென்று மக்­க­ளு­டனும் அர­சியல் பிர­மு­கர்­க­ளு­டனும் கலந்­து­ரை­யாடி உறு­தி­மொ­ழி­களும் வழங்­கினர்.

ஆனால் 30ஆம் திக­திக்கு முன்னர் மீள்­கு­டி­யேற்றம் நடை­பெ­ற­மாட்­டாது என்­பது உறு­தி­யா­கி­விட்ட நிலையில். மீள் குடி­யேற்றம் நடை­பெ­றுமா? என்ற கேள்­வியும் எழுந்­துள்­ளது.

அதற்குச் சான்­றாக வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் சுவீ­க­ரிக்­கப்­பட்ட காணி­க­ளுக்கு சட்­ட­ரீ­தி­யி­லான விடு­விப்பு இன்னும் வழங்­கப்­ப­ட­வில்லை. அது மூடு­மந்­தி­ர­மா­கவே உள்­ளது.

சம்பூர் மக்கள் செறி­வாக வாழ்ந்த குடி­மனைப் பகு­தியில் அமைந்­துள்ள கடற்­படை முகாம் அகற்­றப்­ப­டு­வ­தற்­கான எந்த அறி­கு­றி­களும் தென்­ப­ட­வில்லை. (அர­ச­டிப்­பிள்­ளையார் ஆலயம் முதல் ஐந்தாம் கட்­டை­வரை)
இன்னும் எத்­தனை முத­லீட்டுச் சபை­க­ளுக்கு சம்­பூரை விற்­கலாம் என்ற மறை­மு­கப்­பேச்­சுக்கள் நடை­பெ­று­வ­தாக அறி­யப்­ப­டு­கின்­றது.

இவற்­றை­யெல்லாம் பார்க்­கும்­போது சம்பூர் மக்­க­ளுக்கு மீள்­கு­டி­யேற்­றமும் இல்லை. விமோ­ச­னமும் இல்லை. என்­பது தெரி­கின்­றது.


மீள்­கு­டி­யேற்றம் நடை­பெ­ற­வேண்­டு­மென்று போராட்­டங்ளை முன்­னெ­டுக்க முனைந்த மக்­களை, மீள்­கு­டி­யேற்றம் நடை­பெறும். போராட்டம் நடத்­தா­தீர்கள் என தடுத்­த­வர்­களும் மௌன­மாக உள்­ளனர்.

அர­சி­ய­லுக்­கா­கவும், தேர்­த­லுக்­கா­கவும் மக்­களைப் பணயம் வைக்கும் ஒரு­சி­லரின் முக­மூ­டி­களைக் கிழித்­தெ­றிய ஒட்­டு­மொத்த தமிழ் சமூ­கமும் திர­ள­வேண்டும் என இச்­சந்­தர்ப்­பத்தில் சம்பூர் மக்கள் கேட்டு நிற்­கின்­றனர்.

பாரா­ளு­மன்றத் தேர்­தலைக் குறி­வைத்து கூக்­கு­ர­லிட்ட சிலர் தேர்தல் நடை­பெ­றுமா? என்ற கேள்­விக்­கு­றியால் மௌன­மாகிப் போன­தாகத் தெரி­கின்­றது.

ஊருக்குப் போவதை முதன்மைப் படுத்தி எவர் அதற்குத் துணை­யாக நிற்­கின்­றாரோ அவ­ரையே மக்கள் சேவ­க­னாக பாரா­ளு­மன்றம் அனுப்ப வேண்டும். அதனைச் சம்பூர் மக்கள் அனைவரும் நன்கு உணர்ந்த நிலையில் 30ஆம் திகதி மீள்குடியேற்றம் நடைபெறவில்லை என்றால், மக்களை அணிதிரட்டி சம்பூருக்குள் நுழைவதற்கு யார் முன்நிற்கின்றாரோ அவரே எமது பிரதிநிதி என்பதனை மக்கள் நிச்சயமாக நிரூபித்துக் காட்டுவர். 
« PREV
NEXT »

No comments