Latest News

April 21, 2015

கல்முனை கடற்கரை பிரதேசத்தில் இரவில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, சம்பூர்
கல்­முனை கடற்­கரைப் பிர­தே­சங்­களில் இரவு நேரத்தில் கலா­சார சீர­ழி­வுகள் நடை­பெ­று­வ­தா­கவும் அத­னைக்­கட்­டுப்­ப­டுத்த பொலிஸார் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என பொது­மக்கள் கோரிக்கை விடுக்­கின்­றனர்.கல்­முனை பிர­தே­சத்தில் அண்­மைக்­கா­ல­மாக கஞ்சா போதை­வஸ்து மது­பா­வனை, பாலியல் துர்­ந­டத்­தைகள் என்­பன அதி­க­ரித்­துள்­ளன. கல்­முனை பாண்­டி­ருப்பு பெரி­ய­நீ­லா­வணை போன்ற கடற்­கரைப் பிர­தே­சங்­களில் இரவு நேரத்தில் சிலர் மது அருந்­து­வ­துடன் குடித்து விட்டு தகாத வார்த்தைப் பிர­யோ­கங்­க­ளையும் வாய்த்­தர்க்­கத்­திலும் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

இதன் கார­ண­மாக அயலில் உள்­ள­வர்கள் மிகுந்த சிர­மங்­க­ளுக்­குள்­ளா­கின்­றனர். குடும்­பமாய் வசிப்­ப­வர்கள் தாகாத வார்த்­தை­களை கேட்­பதன் மூலம் தமது பிள்­ளை­களின் கல்­வியும் பாதிக்­கப்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.
இரவு 9 மணிக்கு பின்­னரே இக் கடற்­கரைப் பிர­தே­சங்­களில் மது அருந்­துதல் போதை­வஸ்து பாவ­னையில் ஈடு­படல் போன்­ற­வற்றில் சில குழுக்கள் ஈடு­ப­டு­கின்­றன. இவை தவிர வெளி இடங்­களில் இருந்து வரும் ஆண், பெண் இரு பாலாரும் பாலியல் துர்­ந­டத்­தை­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இவ்­வாறு பெண்­களை அழைத்து வந்து பாலியல் துர்­ந­டத்­தையில் ஈடு­படும் குழுக்­க­ளுக்கு இடையில் கைக­லப்­பு­களும் இடம்­பெற்­றுள்­ளன.

கடந்த வாரம் பாண்­டி­ருப்பு கடற்­க­ரையில் பாலியல் துர்­ந­டத்­தையில் ஈடு­பட்ட இருவர் பிர­தேச இளை­ஞர்­களால் கையும் மெய்­யு­மாக பிடிக்­கப்­பட்டு நையப்­பு­டைக்­கப்­பட்ட பின் எச்­ச­ரிக்கை செய்து அனுப்­பப்­பட்ட சம்ப­வமும் இடம்­பெற்­றுள்­ளது.

இதே­வேளை கல்­முனைப் பிர­தே­சத்தில் அதி­க­ரித்து வரும் போதை­வஸ்து பாவனை சமூக சீர­ழி­வு­களை தடுத்து நிறுத்தும் வகையில் கல்­முனை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தலை­மையில் பல்­வேறு விசேட விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.
கல்­முனைப் பிர­தே­சத்தில் நடைபெறும் சமூக சீரழிவுகளை கட்டுப்படுத்த பொது அமைப்புக்கள் மற்றும் பொலிஸார் சிவில் பிரதி நிதிகள் ஆக்க பூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
« PREV
NEXT »

No comments