Latest News

April 19, 2015

நாளை பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதியை பிரதமர் கேட்பார்?
by Unknown - 0

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதம் திட்டமிட்டபடி நாளை  நடக்காவிட்டால், உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு ஜனாதிபதியை கட்டாயப்படுத்துவதென ஐ.தே.க உயர்மட்டம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான இறுதி அறிவித்தலை நாளைய தினமே ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பார் எனவும் அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை, இன்றையதினம் சுதந்திரக் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அதில்,  19வது திருத்தம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
« PREV
NEXT »

No comments