ஜனாதிபதி கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரி எப்படி துப்பாக்கியுடன் நுழைந்தார் என்பது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் எவரும் துப்பாக்கியுடன் பிரவேசிக்க முடியாது என்பதுடன் அது பாதுகாப்பு பிரதேசமாக அறிவிக்கப்படும்.
இராணுவ கோப்ரல் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த அதிரடிப்படை கமாண்டோக்கள் அவதானித்துள்ளார். எனினும் அதற்கிடையில் கோப்ரல் ஜனாதிபதிக்கு அருகில் சென்றிருந்தார்.
ஜனாதிபதி ஒருவர் வைபவம் ஒன்றில் கலந்து கொள்ளும் போது பிரதமரின் பாதுகாப்பு பிரிவு மற்றும் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவு என்பன நீக்கப்பட்டு ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினரிடம் பாதுகாப்பு ஒப்படைக்கப்படும்.
பிரதேச பொலிஸாரும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் கட்டளைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என கூறப்படுகிறது.
No comments
Post a Comment