பழிவாங்குகையில் அதிகாரம் இல்லாத போது தனக்கும் அது திருப்பி நடக்கும் என சிந்தித்திருக்க வேண்டும். எனக்கு நடந்தது தெரிகிறது தானே. எமது கையில் தவறு நடந்துள்ளது. அமைச்சர்கள் செய்த குற்றம், மோசடிகளை நாம் மறைத்தோம். பொறுத்துக் கொண்டிருந்தோம். அதன் பிரதிபலன்களை நான் இன்று அனுபவிக்கிறேன். மீண்டும் எனக்கு இப்படி செய்ய முடியாது. நான் இப்போது மனிதர்களை அறிகிறேன்.'
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இக்கருத்தை தெரிவித்துள்ளார். கமபஹா ஹேனகம பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் அபிவிருத்திகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தனது ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை திறந்து வைப்பது மாத்திரமே நடப்பதாகவும் அவர் கூறினார்.
தேயிலை, றப்பர், மாணிக்க கல், நெல் என்பவற்றிற்கு நிர்ணய விலை உள்ளதாக கூறுகின்ற போதும் நெல் ஒரு கிலோ 28.50 ரூபாவிற்கே கொள்வனவு செய்யப்படுவதாக மஹிந்த தெரிவித்தார்.
No comments
Post a Comment