முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளதாக நாம் செய்தி வெளியிட்டுள்ளோம். ஆனால் கடுவல நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பிணை பெற்றுக் கொள்ள பசில் முயற்சித்து வருவதாக தெரியவருகிறது.
திவிநெகும திட்டத்தில் நிதி மோசடி செய்ததாக பசில் ராஜபக்ஷ மீது கடுவல நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால் கடுவல நீதவான் முன்சென்று பிணை பெற அவர் முயற்சித்து வருகிறார். எனினும் பொது மக்கள் பணத்தை சூறையாடியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால் பிணை கிடைப்பது கடினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment