முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக ஆபத்தையும் பொருட்படுத்தாமல் செயற்பட்ட அரசஊழியர் என்பதால் அவரிற்கு தீங்கு விளைவிக்கவேண்டாம் என பொதுபலசேனா அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
நாங்கள் எந்த அரசியல்வாதிக்கும் ஆதரவு வழங்கவில்லை ஆனால் கோத்தபாயவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
ஐரோப்பாவில் விடுதலைப்புலிகள் மீண்டும் புத்துயுர் பெறுகின்ற காரணத்தால் கோத்தபாய ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவோ கோத்தபாய ராஜபக்சவை சிறையிலடைக்க விரும்பவில்லை மாறாக சந்திரிகா குமாரதுங்கவே அதனை செய்யமுயல்கின்றார், மேற்குலக நாடுகளுடன் அவர் இதற்கான ஓப்பந்தத்தை செய்துள்ளார் என தேரர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment