Latest News

April 23, 2015

முல்லைத்தீவு இரட்டை வாய்க்கால் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!
by admin - 0

சடலம் மீட்பு!
முல்லைத்தீவு இரட்டை வாய்க்கால் பகுதியில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் வழங்கிய தகவலை அடுத்தே இச்சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை கண்டெடுக்கப்பட்ட சடலம் ஆணா ,பெண்ணா என அடையாளம் காணமுடியாத அளவிற்கு உருகுலைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சடலம் பொலிஸ் பாதுகாப்புடன்  பற்றைக்காட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் இச்சடலம் குறித்த பிரேத விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளார். இதனை அடுத்து சடலம் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
« PREV
NEXT »

No comments