Latest News

April 22, 2015

யாழில் ஊடகவியலாளர் இரண்டு பல்கலைகழக மாணவர்கள் உட்பட நால்வர் கைது!
by Unknown - 0

ஹிரு தொலைகாட்சியின் யாழ்.பிராந்திய ஊடகவியலாளரான த. பிரதீபன் என்பவரே கைது செய்யப்பட்டு உள்ளார்.

யாழ்.பல்கலைகழகத்திற்கு அருகில் வீடொன்றில் பல்கலைகழக மாணவர்களுடன் தங்கி இருந்த வேளை நள்ளிரவு 12.30 மணியளவில் மூன்று வாகனங்களில் சென்ற  பொலிசார் வீட்டுக்குள் நுழைந்து ஊடகவியலாளரையும் அவருடன் தங்கி இருந்த இரண்டு பல்கலைகழக மாணவர்கள் உட்பட நால்வரை கைது செய்து யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று தடுத்து வைத்துள்ளனர்.

கைதுக்கான காரணத்தை அறிவதற்காக ஊடகவியலாளர்கள் சிலர் பொலிஸ் நிலையம் சென்ற போதிலும் பொலிசார் காரணத்தை தெரிவிக்காததுடன் தடுத்து வைக்கப்பட்டு உள்ள ஊடகவியலாளரையும் பார்வையிட அனுமதிக்கவில்லை.

கடந்த 7ம் திகதி  சிவில் உடை தரித்த பொலிசார் கத்தியுடன் மூன்று ஊடகவியலாளர்களை நல்லூரில் இருந்து பொலிஸ் நிலையம் வரையில் துரத்தி சென்று  கொலை அச்சுறுத்தல் விடுத்து இருந்தனர்.

கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளான மூன்று ஊடகவியலாளர்களுள்  இன்றைய தினம் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments