Latest News

April 23, 2015

ஐஸ்வர்யாராயின் நகைக்கடை விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு!
by Unknown - 0

நடிகை ஐஸ்வர்யா ராய் இடம்பெற்ற பிரபல நகைக்கடை விளம்பரம் ஒன்று தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அந்த விளம்பரத்தை திரும்ப பெறுவதாக அந்த நகைக்கடை நிறுவனம் அறிவித்துள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராய் நகை அணிந்து அமர்ந்திருப்பது போலவும், அவருக்கு அருகில் உற்சாகமற்ற, உடல் மெலிந்த குழந்தை ஒன்று அவருக்கு குடை பிடிப்பது போல அமைந்திருக்கும் சமீபத்தில் வெளியான பிரபல நகைக்கடை ஒன்றின் விளம்பரம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இந்த விளம்பரம் இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையிலும், குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்திருப்பதாய் ஆர்வலர்கள் பலர் கருத்து வெளியிட்டனர்.
சமூக வலைத்தளங்களில் இந்த விளம்பரம் சர்ச்சையான கருத்துக்களோடு பரவியிருந்தது. இது போன்ற ஒரு விளம்பரத்துக்கு ஐஸ்வர்யா ராய் தனது முகத்தைக் காட்டியிருக்க்க்கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த விமர்சனங்களுக்கு நேற்று பதிலளித்த நடிகை ஐஸ்வர்யா ராய், அந்த விளம்பரத்தில் தான் தனியாக மட்டுமே படம்பிடிக்கப்பட்டதாகவும், கணினியில் ஃபோட்டோஷாப் பயன்படுத்தப்பட்டு அந்த குழந்தையின் உருவம் அதில் இணைக்கப்பட்டது தனக்கு தெரியாது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள அந்த நகைக்கடை நிறுவனம், ‘இந்த விளம்பரத்தின் மூலம் ராஜவம்சத்தை சேர்ந்த ஒருவரை போன்ற காலமற்ற அழகு மற்றும் நேர்த்தியை முன்வைக்க தான் அந்த படைப்பை இயற்றிய குழு திட்டமிட்டிருந்தனர். எங்களை அறியாமல் இது எவரையாவது, அல்லது ஏதேனும் ஒரு அமைப்பின் உணர்வுகளை புண்படுத்துயிருந்தால் நாங்கள் அதற்கு வருந்துகிறோம். இந்த விளம்பரத்தை நாங்கள் திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டோம்’, என்று தெரிவித்துள்ளது.
« PREV
NEXT »

No comments