Latest News

April 23, 2015

குரூப்–1 மெயின்தேர்வு ஜூன் மாதம் 5–ந்தேதிக்கு தள்ளிவைப்பு
by admin - 0

துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட பல உயர்பதவிகளுக்கு ஆட்களை தேர்ந்து எடுப்பதற்கு குரூப்–1 தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திவருகிறது. அதாவது குரூப்–1 தேர்வை பொருத்தவரை முதல்நிலை தேர்வு, மெயின்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவவை உள்ளன.

 குரூப்–1 முதல்நிலை தேர்வு முடிவு கடந்த ஜனவரி மாதம் 31–ந்தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின்தேர்வை எழுதத்தகுதி பெற்றவர்கள். மெயின்தேர்வு மே மாதம் 2, 3 மற்றும் 4 தேதிகளில் நடைபெற இருந்தது. தற்போது அந்த தேர்வு ஜூன் மாதம் 5, 6, மற்றும் 7–ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முதல்நிலை தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த போது சிலர் கொடுத்த தகவல்கள் சரி இல்லை என்பதால் கால தாமதம் ஏற்படுவதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் நேர்முகத்தேர்வு கொண்ட குரூப்–2 தேர்வுக்கான புதிய அறிவிப்பு இந்த மாதத்திற்குள் வெளியிடப்படும். மாவட்ட கல்வி அதிகாரி தேர்வு முடிவு 28–ந்தேதிக்குள் வெளியிட ஏற்பாடு செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments