Latest News

April 23, 2015

அனைத்துலக நீதிமன்றில் இலங்கையை நிறுத்துமாறு கோரி பெறப்படும் கையெழுத்து வேட்டை யூலை 15யில் நிறைவு!
by Unknown - 0

அனைத்துலக நீதிமன்றில் இலங்கையை பாரப்படுத்துமாறு ஐ.நாவை கோரும் வகையில் பத்து இலட்சம் கையெழுத்துக்களை பெறும் போராட்டம் நாடு கடந்த தமிழீழ அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் சிறிலங்கா தொடர்பிலான அறிக்கை ஐ.நா விரிவுரையாளர்களால் எழுதப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் பத்து இலட்சம் கையொப்பங்களை பெறும் போராட்டத்தை எதிர்வரும் யூலை 15 ஆம் திகதிக்கு முன் நிறைவு செய்யவேண்டிய தேவையில் நாடுகடந்த தமிழீழ அரசு உள்ளது.

எனவே இதற்கமைய ஒரு மில்லியன் ஒப்பங்களை இலக்காக கொண்டு தொடங்கப்பட்டுள்ள கையெழுத்துப் போராட்டத்தினை, மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஊடகங்களின் ஒத்துழைப்பை நாடு கடந்த தமிழீழ அரசு வேண்டி நிற்கின்றது.

இந்த கையெழுத்து வேட்டையை பூர்த்தி செய்ய நாடு கடந்த தமிழீழ அரசின் ஊடக மற்றும் பொது சன விவகாரங்கள் அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 

« PREV
NEXT »

No comments