Latest News

March 13, 2015

பரீட்சைக்குச் சென்ற மகள் வீடு திரும்பவில்லை
by admin - 0

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் திருகோணமலையில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள்

vivasaayi

மூதூர் கட்­டைப்­ப­றிச்சான் மகா வித்­தி­யா­ல­யத்தில் படித்துக் கொண்­டி­ருந்த எனது மகள் பரீட்­சைக்கு சென்று வரு­கிறேன் எனக் கூறி­விட்டு சென்­றவள் சென்­ற­வள்தான் இன்­று­வரை வர­வில்லை என அழுது அழுது வாக்கு மூலம் கொடுத்துக் கொண்­டி­ருந்தார் தாயொ­ருத்தி. விசா­ரணை அதி­கா­ரி­களோ துருவித் துருவி கேள்வி கேட்­டுக்­கொண்­டி­ருந்­தார்கள்.
காணாமல் போனோர் தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ர­ணைக்­கு­ழு­வினர் கடந்த பெப்­ர­வரி மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் தொடர்ந்து நான்கு நாட்கள் (பெப்­ர­வரி 28 மார்ச் 1, 2, 3) திரு­கோ­ண­மலைப் பிர­தே­சத்தில் காணாமல் போனோர் தொடர்­பாக விசா­ர­ணை­களை நடத்­தி­னார்கள். இவ்­வி­சா­ர­ணைகள் பெப்­ர­வரி 28 மார்ச் 1 ஆகிய இரு தினங்­களும் குச்­ச­வெளி பிர­தேச செய­லாளர் அலு­வ­ல­கத்­திலும் மார்ச் 2 ஆம் 3 ஆம் திக­தி­களில் திரு­மலை〪 பட்­ட­ணமும் சூழலும் பிர­தேச சபை அலு­வ­ல­கத்திலும் இடம்­பெற்­றது.
மெக்ஸ்வெல் பர­ண­கம தலை­மையில் ஆணை­யாளர் மனோ­கரி இரா­ம­நாதன், ஆணை­யாளர் சிரஞ்­சனா வைத்­திய ரட்ண〪 செய­லாளர் எஸ். டபிள்யூ. குண­தாச ஆகியோர் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தார்கள். இவ்­வா­ணைக்­கு­ழு­வினர் முன் இறால் குழியில் தற்­பொ­ழுது வசித்து வரும் கோணேஸ்­வரன் சுசீலா காணாமல் போன தனது 16 வயது மகள் பற்றி சாட்­சி­ய­ம­ளித்த போதே மேற்­கண்­ட­வாறு கூறி­யி­ருந்தார்.
மாவி­லாறு யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின் நவம்பர் 22 ஆம் திகதி மாண­வி­யான தனது மகள் கோணேஸ்­வரி (16 வயது) பாட­சா­லையில் நடத்­தப்­படும் பரீட்­சைக்கு மாலை 2 மணி போல் சென்­றி­ருந்தாள். டிசம்பர் மாதம் க.பொ.த. பரீட்சை எழுத இருந்­தவள் மீண்டும் வீடு திரும்­ப­வே­யில்லை. பாட­சா­லைக்கு சென்று அதி­ப­ரிடம் விசா­ரித்தோம். மகளைக் காண­வில்­லை­யெ­னக்­கூ­றினார். வவு­னி­யாவுக்குப் போய் தேடினேன். செஞ்­சி­லுவை சங்­கத்­திடம் முறை­யிட்டேன். தொடர்ந்து என்னால் எனது மகளைத் தேட முடி­ய­வில்லை. அவ­ளு­டைய தந்­தையும் நோய்­வாய்ப்­பட்டு இருந்­த­மையே அதற்கு காரணம். அக்­கா­லத்தில் என் மகள் போலவே பல ஆண் பிள்­ளை­களும் காணாமல் போயி­ருந்­தார்கள் என அந்த தாய் முறை­யிட்டார்.
ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வினர் தமது முதல் நாள் விசா­ர­ணையை கடந்த பெப்­ர­வரி 28 ஆம் திகதி குச்­ச­வெளி பிர­தேச செய­லாளர் பிரிவில் ஆரம்­பித்த போது காணாமல் ஆக்­கப்­பட்டோர் சங்­கத்­தினால் கடு­மை­யான எதிர்ப்புக் காட்­டப்­பட்­டது. உள்­நாட்டு விசா­ர­ணை­யாளர் முன் நாம் சாட்­சி­ய­ம­ளிக்க தயா­ரில்லை சர்­வ­தேச விசா­ர­ணை­யாளர் வரட்டும் சாட்­சி­ய­ம­ளிக்க காத்­தி­ருக்­கி­றோ­மென கூறியே அக்­க­வ­ன­யீர்ப்புப் போராட்டம் நடத்­தப்­பட்­டது. 112 பேர் அழைக்­கப்­பட்­டி­ருந்தும் தமிழர் தரப்பில் ஒரு­வரே சாட்­சி­ய­ம­ளிக்க வருகை தந்­தி­ருந்தார். ஆனால் 20க்கு மேற்­பட்ட முஸ்லிம் தாய்மார்〪 உற­வினர் சாட்­சி­ய­ம­ளித்­தார்கள்.
அன்­றைய தினம் தனது சகோ­தரன் காணாமல் போனது சம்­பந்­த­மாக சாட்­சி­ய­ம­ளித்த திரி­யாய்க்­கி­ரா­மத்தை சேர்ந்த குமா­ர­சாமி துரை­நா­யகம் (65) இவ்­வாறு விவ­ரித்தார். 1990 ஆம் ஆண்டு இந்­திய இரா­ணுவம் நாட்டை விட்டு வெளி­யே­றி­யதைத் தொடர்ந்து இலங்கை இரா­ணுவம் திரியாய் கிரா­மத்தை நோக்கி படையை நகர்த்­திய வேளை பயத்தின் கார­ண­மாக மக்கள் பெருமளவில் முல்­லைத்­தீ­வுக்கு தஞ்­ச­ம­டையச் சென்­றார்கள். அவர்­க­ளுடன் எனது தம்­பியும் சென்றார். குமா­ர­சாமி சோதி­நாதன் (வயது 26) இடம்­பெ­யர்ந்து சென்று கொண்­டி­ருந்த போது புல்­மோட்டை இரா­ணு­வத்தால் கொக்­கிளாய் பட்­டிக்­குடா என்­னு­மி­டத்தில் வைத்து 19.06.1990 இல் கைது செய்­யப்­பட்டார். இவர் கைது செய்­யப்­பட்­டமை தொடர்­பாக வவு­னியா கச்­சே­ரியில் நடை­பெற்ற விசா­ர­ணையின் போது (11.06.1991) பிரி­கே­டியர் இரத்­நா­யக்­க­விடம் எனது தாயார் முறை­யிட்டார். பிரி­கே­டியர் கூறினார். வெலி ஓயா இரா­ணுவ முகாமில் உள்ளார் விரைவில் விடு­விக்­கப்­ப­டுவார் என்று விடு­விக்­கப்­ப­ட­வில்லை. 26.9.1995 விசா­ர­ணைக்­குழு முன் எனது தாயார் முறை­யிட்டார். ஆனால் இது­வரை எனது தம்­பியை காண முடி­ய­வில்லை. மக்கள் விசா­ர­ணைக்­குழு மீது நம்­பிக்­கை­யில்­லை­யென்று கூறு­கி­றார்கள் நான் விசு­வா­சத்­துடன் நம்பி வந்­துள்ளேன். தம்­பியைக் கண்டு பிடித்து தாருங்கள் என துரை­நா­யகம் வின­ய­மாக வேண்­டினார்.
அன்­றைய தினம் பல முஸ்லிம் தாய்­மாரும் சாட்­சி­ய­ம­ளித்­தார்கள். புல்­மோட்­டையை சேர்ந்த அனித்தா பீ.பீ. என்னும் பெய­ரு­டைய தாய் சாட்­சி­ய­ம­ளிக்­கை
யில்〪 17 வய­தான எனது மகனை இனந்­தெ­ரி­யா­த­வர்கள் 1991 பங்­குனி மாதம் அளவில் வீட்­டுக்குள் புகுந்து பலாத்­கா­ர­மாக பிடித்து சென்­றார்கள் மீன்­பிடித் தொழில் செய்யும் அவ­னுக்கு வயது 17 முகமட் ஹசினத் இன்னும் அவன் பற்றி அறிய முடி­ய­வில்­லை­யென அழுத வண்ணம் சாட்­சியம் கொடுத்தார்.
புல்­மோட்­டையைச் சேர்ந்த உதுமான் நாச்­சியா என்ற பெய­ரு­டைய தாயார் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்〪 ஊர்­காவல் படையில் வேலை செய்த எனது மகன் முகமட் நஸீர் என்­ப­வரை இரவு 11 மணி போல் நாலு பேர் ஆயு­த­தா­ரி­க­ளாக வந்து வீட்­டுக்குள் புகுந்து கடத்திக் கொண்டு போனார்கள். அவர்கள் சிங்­க­ளத்­தையும் தமி­ழையும் கதைத்­தார்கள். விசா­ரித்து விட்டு அனுப்­பு­வ­தாக கூறி­னார்கள் என அந்த முஸ்லிம் தாய் கூறினார்.
குச்­ச­வெளி பிர­தேச சபை செய­ல­கத்தில் இரண்­டா­வது நாளாக (01.03.2015) நடை­பெற்ற விசா­ர­ணையின் போதும் இரண்­டொரு தமிழ் மக்­களைத் தவிர யாரும் சாட்­சி­ய­ம­ளிக்க வர­வில்லை. ஆனால் முஸ்லிம் சமூ­கத்­தவர் சாட்­சி­ய­ம­ளித்­தார்கள். மூன்­றா­வது நாளாக (02.03.2015) ஜனா­தி­பதி விசா­ரணை குழுவின் விசா­ர­ணைகள் பட்­ட­ணமும் சூழலும் பிர­தேச செய­ல­கத்தில் நடை­பெற்­றது. குச்­ச­வெளி பிர­தேச செய­ல­கத்­துக்கு முன் இடம்­பெற்­றதைப் போலவே இங்கும் காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான சங்கம் கவனயீர்ப்புப் போராட்­டத்தை நடத்­தி­யது. இருந்த போதிலும் பலர் ஆணைக்­குழு முன் சாட்­சியம் அளித்­தார்கள்.
எனது மகன் டொமி­னிக்போல் கொழும்­பி­லுள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து கொண்­டி­ருந்தார். 1990 ஆண்டு உக்­கி­ர­மான காலப்­ப­குதி. எவ­ருமே வெளியில் நட­மா­ட­மு­டி­யாத கொடிய காலப்­ப­கு­தியில் 1990 ஆம் ஆண்டு 7ஆம் மாதம் அளவில் கொழும்­புக்கு பஸ்ஸில் சென்­றவர் இரா­ணு­வச்­சோ­த­னைச்­சா­வ­டியில் வைத்து கடத்­தப்­பட்­டி­ருக்­கிறார். எனக்கு எட்டுப் பிள்­ளைகள். இந்­தப்­பிள்­ளையின் இழப்பை என்னால் தாங்க முடி­ய­வில்லை.
அவ­னைப்­பற்­றிய ஆவ­ணங்­களை அவ­னைத் ­தே­டித்­தே­டியே தொலைத்து விட்டேன் என கண்ணீர் மல்க கூறினார். அம­லோற்­ப­மே­ரி­யென்னும் தாய் திரு­ம­லை­த­லைமைக் காரி­யா­லயம் தொட்டு செஞ்­சி­லுவை சங்கம் வரை முறை­யிட்­டுள்ளேன். எந்த பயனும் தக­வலும் கிட்­ட­வில்லை என்றார்.
ஆலங்­கேணி கிரா­மத்தில் அடி பிடி நடப்­ப­தாகக் கேள்­விப்­பட்டேன். எங்கள் ஊரைச்­சுற்றி இரா­ணு­வமும் ஊர்­காவல் படையும் வளைத்து நின்­றது. வழ­மை­யாக நடை­பெறும் காரி­ய­மென பயந்து போய் வீட்­டுக்குள் இருந்து விட்டோம். எனது மகன் சித்­த­சு­வா­தீ­ன­மற்­றவன் பசி என்­ப­தற்­காக அரு­கி­லுள்ள கடைக்கு உணவு வாங்க சென்றான். வீட்­டுக்கு திரும்பி வர­வே­யில்லை. 17 வயது கொண்ட வ. பவன் கிண்­ணி­யா­வி­லுள்ள அல்­அக்ஷா பாட­சா­லையில் படித்துக் கொண்­டி­ருந்தான். 1990 ஆண்டு இச்­சம்­பவம் நடை­பெற்­றது. திகதி மாதம் ஞாப­மில்லை எனக் பரி­தா­பத்­துடன் தனது மகன் காணா­மல்­போன சம்­ப­வத்தை ஆணைக்­குழு அதி­கா­ரி­க­ளுக்கு விவ­ரித்தார் கிண்­ணி­யா­வைச்­சேர்ந்த சோம­சுந்­தரம் வர்­ண­கு­ல­நாதன்.
(தொடரும்)
பக்­கத்து வீட்­டுக்­கா­ரர்கள் ஓடி­னார்கள் வெளியே வந்து பார்த்த போது ஊரே ஓடி­யது. புலி­க­ளுக்கும் இரா­ணு­வத்­துக்கும் சண்டை நடக்­கி­றது என ஒரு சிலர் கத்­திக்­கொண்டே ஊருக்கு அரு­கி­லுள்ள கண்­டைக்­காட்­டுக்கு ஓடி­னார்கள். உயிரை கையில் பிடித்­துக்­கொண்டு குடும்பம் குடும்­ப­மாக ஓடினோம். நாங்கள் போகு­மி­ட­மெல்லாம் ஊர்­காவல் படையும் இரா­ணு­வமும் நின்­றது. எனது மகன் நாம் ஓடு­வ­தற்கு முன்­னமே ஓடி விட்டான். காட்­டுக்குள் எங்கு போனான் என்ன ஆனான் என்று தெரி­ய­வில்லை. கண்­டைக்­காட்­டுக்குள் ஒழித்­த­வர்கள் அனை­வரும் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்டு பின் சீனக்­குடா கிளப்பன் பேக் அக­தி­மு­கா­முக்கு கொண்டு வரப்­பட்டோம்.
எமது வீடு­வா­சல்­களை எரிக்­கப்­பட்டு விட்­டது.
அன்று உடுத்த உடுப்­புடன் தான் வெளி­யே­றினோம். 1995 ஆம் ஆண்டு வரை கிளப்பன் பேர்க் முகா­மி­லி­ருந்த நாம் சொந்த ஊருக்கு திரும்­பினோம். மக­னைக்­காண முடி­ய­வில்லை. எனது மகன் காணாமல் போனது தொடர்­பாக கிராம சேவகர் சீனக்­குடா பொலிஸ் செஞ்­சி­லுவை சங்கம் அனைத்­திலும் முறைப்­பாடு செய்தோம். செஞ்­சி­லுவை சங்­கத்­தி­ன­ரிடம் நாம் சென்ற போது அவர்கள் ஒரு பத்­தி­ரி­கையைக் காட்­டி­னார்கள். அந்­தப்­பத்­தி­ரி­கையில் எனது மகனின் பெய­ருக்கு நேரே சிவத்த புள்­ளடி இடப்­பட்­டி­ருந்­தது.
இவ்­வாறு தெரி­வித்தார் இ.பொ.ச. வில் கட­மை­யாற்றி இளைப்­பா­றிய ஆலங்­கேணி கிரா­மத்தை சேர்ந்த நபர்.
கிண்­ணியா கிரா­மத்தை சேர்ந்த ஜெயிலான் காதம்­பீபீ 7 பிள்­ளை­களின் தாய் ஆணைக்­கு­ழுமுன் இவ்­வாறு சாட்­சியம் அளித்தார். எனது மகனின் பெயர் கா. முக­மது அலி. கடத்­தப்­பட்­ட­போது அவ­ருக்கு வயது 32. 1986 ஆண்டு அந்த சம்­பவம் நடை­பெற்­றது. காலை சுபத்­தொ­ழுகை நேரம் நாலு பேருடன் தம்­ப­ல­காமம் கல்­பிட்­டியா குளம் என்­னு­மி­டத்­துக்கு மீன்­பி­டிக்கப் போனார்.
என்ன நடந்­தது ஏது நடந்­த­தென்று தெரி­யாது. அவரைத் தேடிக் கொண்­டே­யி­ருந்தோம். அக்­காலப் பகு­தியில் கடு­மை­யான வான் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்த காலம் 9 நாளைக்குப் பிற­குதான் தெரிய வந்­தது. மகனை கடத்­தி­விட்­டார்கள் என்று. அவ­னுடன் போன நாலு பேரும் கடத்­தப்­பட்­டி­ருக்க வேண்­டு­மென்று நம்­பு­கிறோம்.
இவ்­வாறு தெரி­வித்தார் அந்த வயது போன முஸ்லிம் தாய்.
திரு­கோ­ண­ம­லையில் கேணி­ய­டியில் குடி­யி­ருந்த எனது மகன் ஒரு ஓட்டோ சாரதி. நாங்கள் 7 ஆம் வட்­டாரம் கட்­டை­ப­றிச்­சா­னைச்­சேர்ந்­த­வர்கள் .2004 ஆம் ஆண்டு ஜன­வரி முத­லாந்­தி­கதி (01.012004) கடத்­தப்­பட்டார். அவ­ரு­மில்லை அவ­ரு­டைய ஓட்­டோவும் இது­வரை யாராலும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்­லை­யென கட்­டைப்­ப­றிச்­சா­னைச்­சேர்ந்த நம­சி­வாயம் துரை­நா­யகம் என்ற தந்தை தனது மகன் தேவ­சே­னா­தி­பதி காணாமல் போனது பற்றி தெரி­வித்­த­தோடு எனது மகனை தேடித்­தே­டியே எனது மனைவி அந்தக் கவ­லையில் இறந்து போய்­விட்டாள் என்று கண்கள் பனிக்க தெரி­வித்தார் அந்த தந்தை.
தம்­ப­ல­கமம் ஐயனார் திடலைச் சேர்ந்த பவ­ள­மலர் தனது மகன் காணாமல் போன­மை­பற்றி வரண்ட கண்­க­ளுடன் இப்­படிச் சம்­ப­வத்தை விவ­ரித்தார். எனக்கு இரண்டு பெண் பிள்­ளையும் ஒரு ஆண் பிள்­ளையும் 1990 ஆம் ஆண்­ட­ளவில் திரு­கோ­ண­மலை தொழில்­நுட்பக் கல்­லூ­ரியில் படித்துக் கொண்­டி­ருந்தான். 19 வயது கொண்ட எனது மகன் ஜெய­வண்­ணனை வீட்­டுக்கு வந்த இரா­ணு­வத்­தினர் விளக்­கத்­துக்கு வரும்­படி அழைத்துச் சென்­றனர். இச்­சம்­பவம் நடை­பெற்­றது. வன்­னியில் பயத்தின் கார­ண­மாக வன்­னிக்கு இடம்­பெ­யர்ந்து சென்­றி­ருந்தோம். அப்­பொ­ழுதே இந்தக் கொடுமை நடந்­தது என்றார்.
எனக்கு மூன்று பிள்­ளைகள். மிக மோச­மான காலப்­ப­குதி கடத்­தல்­களும் கொலை­களும் துப்­பாக்கி வேட்­டு­களும் தேடுதல் கொடு­மை­களும் மலிந்து போய் கிடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் நாள் பிள்­ளை­களின் பசியைப் போக்­க­வா­வது வேலைக்குப் போக வேண்­டு­மென்ற கவ­லை­யுடன் எனது கணவன் கார்த்­தி­கேசு உத­ய­ராசா (23) துவிச்­சக்­கர வண்­டியில் மிக மிகக் கிட்­டிய தூரத்தில் உள்ள திரு­மலை தலைமைப் பொலிஸ் நிலை­யத்­துக்கு அருகில் உள்ள இடத்­துக்கு கூலி வேலைக்குப் போனார். போன­வரை நாம் மீண்டும் காண முடி­ய­வில்லை. எனது பிள்­ளை­களை காண­வேண்­டு­மென ஆண்டுக் கணக்­காக காத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள் என தனது கண­வனின் காணாமல் போன சம்­ப­வத்தை விப­ரித்தார் பாலை­யூற்றைச் சேர்ந்த 50 வயது மதிக்­கத்­தக்க உத­ய­ராசா எம­லியா.
வயல் வேலைக்கு அன்­றாட பிழைப்­புக்­காக சென்றார் எனது மகன். 2005 ஆம் ஆண்டு இச்­சம்­பவம் நடை­பெற்­றது. இன்­றைக்கு 10 வரு­டங்கள் ஆகியும் அவனைத் தேடிக் கொண்­டி­ருக்­கி­றோ­மென கிண்­ணியா ரகு­மா­னியா நகரைச் சேர்ந்த அப்துல் சமது உம்மா தெரி­வித்தார்.
தொடர்ந்து ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைக்கு திரு­கோ­ண­ம­லையில் எதிர்ப்­புக்­காட்­டப்­பட்­டது. காணாமல் ஆக்­கப்­பட்டோர் சங்­கத்தால் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடா­தத்­தப்­பட்­டது. நாலா­வது நாளான (03.03.2015) அன்றும் பெருந்­தொ­கை­யான மக்கள் செய­ல­கத்­துக்கு முன்னால் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தார்கள். இன்­றைய தினம் பெருந்­தொ­கை­யானோர் காணாமல் போன தமது உற­வுகள் பற்றி புதி­தாக பதி­வ­தற்கு வந்­தி­ருந்­த­மையைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. இவ்­வா­றான முரண்­பட்ட சூழ்­நி­லை­யிலும் பட்­ட­ணமும் சூழலும் பிர­தே­சத்தில் நாலா­வது நாளாக (03.03.2015) விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட போது தமிழ் முஸ்லிம் சிங்­கள உற­வுகள் சாட்­சியம் அளிக்க வந்­தி­ருந்­தார்கள்.
எனது கணவன் ஒரு விவ­சாயி. அன்­றைய தினம் (05.04.1985) இரண்டு பேர் எனது வீட்­டுக்கு இரவு 9 மணி போல் வந்­தார்கள். இவரை விசா­ரணை செய்ய வேண்டும் அழைத்துக் கொண்டு போகி­றோ­மென ஒரு மாதி­ரி­யான மொழியில் பேசி­னார்கள். அவர்கள் யார்? எதைச் சேர்ந்­த­வர்கள் என்­பது பற்றி என்னால் அறிந்து கொள்ள முடி­ய­வில்லை. நாம் பயந்து போய் இருந்த காலம். ஆனால் நாம் இரா­ணு­வக்­கட்­டுப்­பாட்­டுக்குள் தான் வசித்து வந்தோம். எனது கண­வ­னுக்கும் இயக்­கத்­துக்கும் எந்­த­விதத் தொடர்பும் இருக்­க­வில்லை. இக்­கா­லப்­ப­கு­தியில் பலர் காணாமல் போனது பற்றி நான் அறிவேன் என தனது கணவன் வடி­வேலு கிருஸ்­ண­பிள்ளை காணாமல் போன­மை­பற்றி கும்­பு­றுப்­பிட்­டியைச் சேர்ந்த கி. இரா­ஜேஸ்­வ­ரியே சாட்­சி­ய­ம­ளித்தார். இவ­ருக்கு மூன்று பிள்­ளைகள் இருப்­ப­தா­கவும் தெரி­வித்தார்.
கிண்­ணி­யாவில் வசித்து வந்தோம். தற்­பொ­ழுது நான் லிங்க நகரில் வசித்து வரு­கிறேன். 1990 ஆம் ஆண்டு நாம் கிண்­ணி­யாவில் வசித்து வந்த காலத்தில் யூலை 7 ஆம் திகதி எனது கண­வ­னுக்கு அந்த கொடூரம் நடை­பெற்­றது. இந்­திய இரா­ணுவம் வெளி­யே­றி­யி­ருந்­தது. ஆறு பிள்­ளை­களின் தந்­தை­யான எனது கணவன் சின்­னையா வேலா­யுதம் (32) இனக்­க­ல­வ­ரத்தின் உச்சம் நில­விய காலம். எனது கண­வரை இரா­ணுவம் கைது செய்து கொண்டு போவ­தாக அய­ல­வர்கள் என்­னிடம்
ஓடி வந்து கூறி­னார்கள் ஒரு சில நாட்­க­ளுக்­குப்பின் கேள்­விப்­பட்டேன் எனது கணவன் சுடப்­பட்டார் என்று. ஆனால் எனக்கு பொலிஸார் சொன்­னார்கள் உனது கண­வனை புலிகள் சுட்டு விட்­டது என்று. அந்த சம்­ப­வத்தால் பாதிக்­கப்­பட்ட யானும் எனது பிள்­ளை­களும் தஞ்சம் கோரி யாழ்ப்­பாணம் ஓடினோம். 2001 ஆம் ஆண்டு திரும்பி வந்து சீனக்­குடா பொலிசில் முறைப்­பாடு செய்­துள்ளேன் என கிண்­ணி­யாவைச் சேர்ந்த வேலா­யுதம் தவ­மணி ஆணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளித்தார்.
எனது மகன் தெஹி­வ­ளை­யி­லுள்ள வெப்­டினன் கொமாண்டர் பொய­கொட என்­பவர் வீட்டில் வேலை செய்து கொண்­டி­ருந்த காலத்தில் திடீ­ரென காணாமல் போய்­விட்டார். திரு­கோ­ண­மலை புளி­யங்­கு­ளத்தை சேர்ந்த யோக­ராஜா அன்­ன­பூ­ரணம் இவ்­வாறு சாட்­சி­ய­ம­ளித்தார் 1990 ஆம் ஆண்­ட­ளவில் மேற்­படி லெப்­டினன்ட் கிளப்பன் பேர்க் முகா­முக்கு வருவார் இவர் எனது மகன் புவ­ன­நா­ய­கத்தை அங்­கி­ருந்து கூட்­டிக்­கொண்டு தனது தெஹி­வளை வீட்டில் வைத்தார். நாங்கள் அப்­பொ­ழுது பச்சை நூல் அகதி முகா­மி­லி­ருந்தோம். பதவி உயர்வு பெற்று செல்­வ­தாக கூறிக் கொண்டே அவர் எனது மகனை தன்­னுடன் அழைத்து சென்றார். திடீ­ரென ஒருநாள் அவ­ரி­ட­மி­ருந்து கடி­த­மொன்று வந்­தது. 06.12.1992 மகன் காணாமல் போய்விட்டானென்று. நாங்கள் மகனைத் தேடி கொழும்புக்கு ஓடினோம். பொயகொட சொன்னார் வீட்டில் நித்திரை செய்து கொண்டிருந்த வரை அதிகாலை 4 மணியிலிருந்து காணவில்லையென்று. எங்கும் தேடியும் காணவில்லை. எனது மகனை அவர் நன்றாகப்பார்த்தார். 1999ஆம் ஆண்டு எனது கணவர் இறந்து விட்டார். அன்று வருவான் என்று எதிர்பார்த்தேன். இன்று வரை காண முடியவில்லை. இவ்வாறு கூறினார் புளியங்குளத்தை சேர்ந்த யோகராசா அன்னபூரணம்.
தனது நண்பர்களுடன் வெருகல் கோயிலுக்குப் போனவர் இன்று வரை வீடு திரும்பவேயில்லை. பள்ளிக் கூடத்தில் படித்த எனது மகன் காணாமல் போனபோது வயது 17 சம்பூர் கிராமமே எமது பூர்வீக கிராமம். குகதாஸ் பியகரன் அன்று காலை 26.06.2006 வெருகல் கோயிலுக்கு போய் வருகின்றேன் என சொல்லி விட்டு காலையில் 7 மணிக்குப் போனவன் சைக்கிளில் தனது நண்பர்களுடன் மீண்டும் வரவேயில்லை. அவனுடைய ஞாபகமாக அவன் கொண்டு சென்ற சைக்கிள் கூட கிடைக்காதா என ஏங்கியதுண்டு. எந்தக் கூட்டாளிகளுடன் போனான் என்ற விபரமும் எனக்குத் தெரியாது என குகதாஸ் யோகேஸ்வரி என்ற பெயருடைய தாய் தனது வரண்டு போன கண்ணில் பட்டும் படாமலும் கண்ணீர் வர தனது மகனின் காணாக்கதையைக் கூறிக் கொண்டிருந்தார்.
இவ்வாறு மகனை இழந்த தாய்மார், புருஷன் இழந்த மனைவிமார், சகோதரனை இழந்த சகோதரர்கள், உறவினரை இழந்த சொந்த உறவுகள் என பலர் அளித்த சாட்சியங்கள் பதிவுபடுத்தப்பட்டது.
« PREV
NEXT »