சிறிலங்கா தொடர்பிலான ஐ.நாவின் அறிக்கை ஒத்தி வைக்கபட்டாலும் தமிழர்களுக்காகன பரிகார நீதிக்கான செயற்பாட்டில் தமிழர் பிரதிநிதிகள் ஐ.நா மனித உரிமைச்சபையில் தீவிரமாகவுள்ளனர்.
தமிழீழத் தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள பிரதிநிதிகள் உட்பட புலம்பெயர் தேசங்களை மையமாக கொண்டு இயங்குகின்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், பிரத்தானிய தமிழர் பேரவை, தமிழர் மனித உரிமைகள் மையம் பிரான்சு மற்றும் பல தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் இச்செயற்பாட்டில் உள்ளனர்.
பிரென்சு மொழி பேசுகின்ற ஆபிரிக்க நாடுகளை மையப்படுத்தி பிரான்சு தலைமையகமாக கொண்டு 23 நாடுகளில் இயங்குகின்ற CNRJ அமைப்பின் தலைவர் Federic Paprpani அவர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நாவுக்கான வளஅறிஞர் குழுவில் இணைந்து பங்கெடுத்துள்ளார்.
சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் வகையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஐ.நா மனித உரிமைச்சபையின் 28வது தொடரினை மையப்படுத்திய கையேடும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
மூத்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் கரண் பார்கர் அம்மையார் அவர்கள் முதற்கையேட்டினைப் பெற்றுக் கொள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நாவுக்கான ஒருங்கிணைப்பாளர் முருகையா சுகிந்தன் அவர்கள் வெளியிட்டு வைத்தார்.
இதேவேளை தமிழர்களுக்கான நீதியினை வலியுறுத்தி தமிழர் பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்திருந்த உப மாநாட்டில், சிறிலங்காவை குற்றவியல் நீதிமன்றத்திடம் நிறுத்துமாறு கோரும் கையெழுத்துப் போராட்ட மனு, நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி சுதன்ராஜ் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.
ஒரு மில்லியன் கையெழுத்துக்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ள கையெழுத்து இயக்கமானது நியூயோர்கில் ஐ.நா தலைமைகத்துக்கு முன்னாலும், ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலிலும் தொடங்கப்பட்டது.
நியூயோர்க்கில், முதற்கையெழுத்தினை அமெரிக்காவின் முன்னாள் தலைமை அரசு வழக்கறிஞர் ராம்சே கிளார்க் அவர்கள் ஒப்பமிட்டு தொடக்கி வைத்திருந்தார். கையொப்ப மனுவினை நிவேதா ஜெயக்குமார், சூமியா கருணாகரன் ஆகிய இளந்தலைமுறையினர் வாசித்தனர்.
'போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்குப் முற்றிலும் எந்தப் பொறுப்பேற்பும் இல்லை என்பதால், சிறிலங்காவில் தற்போதைய சூழ்நிலை ஐ.நா.சாசனம் அத்தியாயம் 7 பிரிவு 39 இன் கீழ் 'அமைதிக்கான அச்சுறுத்தல்' தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையை உள்ளடக்கியதாக இருக்கிறது' என்று இந்த கையொப்ப மனுவில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மனு தமிழ், சிங்களம், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, உட்பட 15 மொழிகளில் தொடங்கப்பட்டுள்ள இக்கையெழுத்து இயக்கத்தில் www.tgte-icc.org என்ற இணையத்தளத்தின் வழியே உலகெங்கும் உள்ளவர்கள் ஒப்பமிட்டுக் கொள்ளலாம். அத்தோடு இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக சர்வதேசக் குற்றங்களை, சர்வதேச மன்றங்களிலும் அயல்நாடுகளில் உள்ள உள்நாட்டுத் தீர்ப்பாயங்களிலும் முன்னிறுத்துவதற்கும், வழக்குப் பணிகளுக்கான நிதியைத் திரட்டுவதற்கான வேண்டுகோளும் முன்வைக்கப்படுகிறது.
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையால் குறிப்பிடப்பட்டுள்ளது போல தமிழர்களுக்கான நீதி கிடைக்க ஏதுவான அரசியல் சூழல் அங்கு இல்லை என்பதையும் இந்த மனு சுட்டிக்காட்டுகிறது. சிங்களர்கள் மேலாதிக்கம் பெற்றுள்ள ஒரு நீதித்துறை சிங்கள இராணுவ அதிகாரிகளை விசாரிக்க முயற்சி செய்வது நீதியைக் கொண்டு வராது என்றும், இது கடந்தகால விசாரணை ஆணையங்களின் சான்றால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த மனு வாதிடுகிறது.
1983 இனப் படுகொலைகளைத் தொடர்ந்து நாங்கள் விசாரணை நடத்துவோம் என்று ஐ.நா.விடம் சிரிலங்காத் தூதர் அளித்த வாக்குறுதியைக் குறிப்பிட்டு அந்த வாக்குறுதி ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை என்பதும் கையொப்ப மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1983 இனப் படுகொலைகளைத் தொடர்ந்து நாங்கள் விசாரணை நடத்துவோம் என்று ஐ.நா.விடம் சிரிலங்காத் தூதர் அளித்த வாக்குறுதியைக் குறிப்பிட்டு அந்த வாக்குறுதி ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை என்பதும் கையொப்ப மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தின் முன்னால் படைத் தலைவர் தற்போதைய அரசாங்கத்தின் ஓர் உறுப்பினராக இருக்கிறார் என்பதும், புதிய அதிபர் சிறிசேனாவின் உள்ளார்ந்த குற்றத்தன்மை நீதி வழங்கப்படுவதற்கு உகந்ததாக இருக்காது என்பதும் எந்த விதத்திலும், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துவது தவிர வேறு வழியில்லை எனபதும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
************வாக்களிக்க இங்கே அழுத்தவும் ***********
Social Buttons