Latest News

March 12, 2015

பிரதமர் மோடிக்கு மகத்தான வரவேற்பு விமான நிலையத்தில் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை
by admin - 0

www.vivasaayi.com
 மோடி
வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி இன்று வெள்ளிக்­கி­ழமை இலங்கை வந்­துள்ள நிலையில், அவரை இன்று காலை கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலை­மை­யி­லான குழு­வினர் வர­வேற்­றனர். இந்­திய பிர­த­மரின் வரு­கையை முன்­னிட்டு பாது­காப்பு ஏற்­பா­டுகள் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் விசேட போக்­கு­வ­ரத்து ஒழுங்­கு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.
இன்­று­காலை 5.30 மணிக்கு கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தலை­மை­யி­லான குழு­வினர் வந்­த­டைந்­தனர்.
அத்­துடன் விமான நிலை­யத்தில் இந்­திய பிர­தமர் மோடிக்கு முப்­ப­டை­யி­னரின் அணி­வ­குப்பு மரி­யாதை அளிக்­கப்­பட்­ட­துடன் செங்­கம்­பள வர­வேற்பும் வழங்­கப்­பட்­டது.
இலங்­கையின் மிக நெருங்­கிய அயல் நாடான இந்­தி­யாவின் பிர­தமர் ஒருவர் 28 வரு­டங்­க­ளுக்கு பின்னர் உத்­தி­யோ­க­பூர்வ அரச
விஜ­யத்தை மேற்­கொண்டு
இலங்கை
வந்­துள்­ளமை வர­லாற்று முக்­கி
யத்­துவம் வாய்ந்த விட­ய­மாக கரு­தப்­ப­டு­கின்­றது. இந்­திய பிர­த­மரின் இலங்கை விஜ­யத்­தின்­போது
பல உடன்­ப­டிக்­கை­களும் இரண்டு நாடு­க­ளுக்கு இடையில் இன்­றைய தினம் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளன.
பிர­தமர் நரேந்­திர மோடி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் பிர­தி­நி­திகள் எதிர்க்­கட்சித் தலைவர் நிமால் சிறி­பால டி. சில்வா அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் பிர­தி­நி­திகள் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வர்கள் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளார்.
அத்­துடன் இன்று பிற்­பகல் 3.15 மணிக்கு பாரா­ளு­மன்­றத்தில் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த உரையை இந்­திய பிர­தமர் மோடி நிகழ்த்­த­வுள்ளார். மேலும் நரேந்­திர மோடி யாழ்ப்­பாணம் தலை­மன்னார் மற்றும் அனு­ரா­த­புரம் ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கு விஜயம் செய்­ய­வுள்ளார்.
இதே­வேளை இலங்கை வர்த்­தக சம்­மே­ளனம் கொழும்பில் ஏற்­பாடு செய்­துள்ள வர்த்­தக மாநாட்­டிலும் இந்­திய பிர­தமர் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்ளார். இதன்­போது இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான வர்த்­தக பொரு­ளா­தார முத­லீட்டுத் துறை­க­ளி­லான தொடர்­பு­களை வலுப்­ப­டுத்­து­வது தொடர்பில் விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.
மேலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் இந்­திய பிர­தமர் மோடிக்கும் இடையில் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தைகள் இன்று காலை இடம்­பெ­ற­வுள்­ளன. இந்த இரு­த­ரப்பு சந்­திப்­பின்­போது . பல்­வேறு விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டப்­ப­படும். . முக்­கி­ய­மாக இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான உறவை வலுப்­ப­டுத்துல் வர்த்­தக பொரு­ளா­தார உறவை மேம்­ப­டுத்தல் உள்­ளிட்ட பல­வேறு விட­யங்கள் குறித்து பேசப்­படும்.
மேலும் நாட்டில் புரை­யோ­டிப்­போ­யுள்ள தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கான அணு­கு­முறை அந்த முயற்­சிக்கு இந்­தியா எவ்­வா­றான பங்­க­ளிப்பை வழங்க முடியும் போன்ற விட­யங்­களும் பேசப்­ப­ட­வுள்­ளன.
அத்­துடன் போருக்குப் பின்­ன­ரான இலங்­கையில் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் சர்­வ­தேச ரீ்தியில காணப்­ப­டு­கின்ற சவால்கள் மற்றும் இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான உறவை என்­பன குறித்து கலந்­து­ரை­யா­டப்­படும். மீனவர் விவ­காரம் சம்பூர் அனல் மின்­நி­லைய விடயம் உள்­ளிட்ட பல விட­யங்கள் குறித்து இதன்­போது பேச்சு நடத்­தப்­ப­ட­வுள்­ளது.
இரு­த­ரப்பு சந்­திப்பின் பின்னர் சில உடன்­ப­டிக்­கை­களும் இலங்கை இந்­திய நாடு­க­ளுக்கு இடையில் கைச்­சாத்­தி­டப்­படும். தொடர்ந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இந்­தியப் பிர­தமர் மோடியும் ஊடக அறிக்­கை­களை வெளி­யி­டு­வார்கள்.
1987 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் இந்­திய பிர­தமர் ஒருவர் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்கை வர­வுள்­ளமை இதுவே முதல் தட­வை­யாகும். இதற்கு முன்னர் 2008 ஆம் ஆண்டு முன்னாள் இந­திய பிர­தமர் மன்­மோகன் சிங் இலங்­கையில் நடை­பெற்ற சார்க் மாநாட்டில் கலந்­து­கொள்ள வந்­தி­ருந்­தாலும் அரச விஜ­ய­மாக வர­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் கடந்த காலங்­களில் உறவு விரி­ச­ல­டைந்­து­வந்த நிலையில் புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­த­துடன் இரண்டு நாடு­க­ளுக்கு இடையில் உறவு வலு­வ­டைய ஆரம்­பித்­தது.
அந்­த­வ­கையில் இரண்டு மாதங்­களில் இரண்டு நாடு­க­ளுக்கு இடையி்ல் நான்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யங்கள் இடம்­பெற்­றுள்­ளன. புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­ததும் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர இந்­தி­யா­வுக்கு உத­தி­யோ­க­பூர்வ விஜ­யத்த மேற்­கொண்டார். அதன் பின்னர் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான குழு­வினர் இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்­டனர். அத­னை­ய­டுத்து இந்­திய வெளி­யு­றவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்­கைக்கு வருகை தந்தார். தற்­போது இந்­திய பிர­தமர் இலங்­கைக்கு வந்­துள்ளார்.
அந்­த­வ­கையில் இந்­திய பிர­த­மரின் இலங்கை விஜ­யத்தின் ஊட்ாக நாட்டின் தமிழ் பேசும் மக்கள் பல எதிர்­பார்ப்­புக்­களை வைத்­துள்­ளனர். அதா­வது தமது நீண்­ட­கால பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வுக்­கான அடித்­தளம் இந்­திய பிர­த­மரின் வரு­கை­யுடன் இடப்­படும் என்ற நம்­பிக்கை தமிழ் மக்­க­ளுக்கு உள்­ளது.
இந்­திய பிர­த­மரி்ன் இலங்கை விஜயம் குறித்து சிரேஷ்ட ஊட­க­வி­யாளர் அமல் ஜய­சிங்க கேச­ரிக்கு கருத்து வெளி­யி­டு­கையில்
நீண்ட காலத்­துக்கு பின்னர் இந்­திய பிர­தமர் அரச விஜ­ய­மாக இலங்கை வரு­கின்றார். இது முக்­கி­யத்­துவம் வாய்ந்த விட­ய­மாகும். காரணம் இலங்கை சீனாவின் பக்கம் சென்­றுக்­கொண்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கின்ற காலத்தில் இந்­திய பிர­தமர் இலங்கை வரு­கின்றார். எனவே இது முக்­கி­ய­மா­னது. அதா­வது இந்து சமுத்­திர பிராந்­தி­யத்த்தில் இந்­த­யாவின் செல்­வாக்கு இருப்­ப­தாக வெளிக்­காட்­டு­வ­தற்கு இந்த பயணம் கார­ண­மாக அமையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. மேலும் இந்­தியா இலங்­கையின் நெருங்­கிய நாடு என்று கூறப்­பட்­டாலும் அது இது­வரை இந்­திய பிர­தமர் ஒருவர் யாழ்ப்­பாணம் சென்­ற­தில்லை. இம்­முறை முதற் தட­வை­யாக இந்­திய பிர­தமர் ஒருவர் யாழ்ப்­பாணம் செல்­கின்றார். இது வர­லாற்று ரீதி­யான முக்­கி­யத்­துவம் வாய்ந்த விட­ய­மாகும் என்றார்.
இதே­வேளை இலங்கை விஜயம் தொடர்பில் தனது பேஸ்புக் தளத்தில் இந்­திய பிர­தமர் மோடி கீழ் கண்­ட­வாறு பதிவு செய்­துள்ளார்.
"" நான் இலங்­கைக்கு விஜயம் செய்­கின்றேன். மிகவும் மகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் நான் இலங்­கைக்கு விஜயம் செய்­கின்றேன். எனது விஜ­யத்தின் மூலம் இலங்­கை­யு­ட­னான பல­வ­மான உறவு மேலும் வலு­வ­டையும் என்று எதிர்­பார்­க­கிக்றேன். அயல்­நா­டு­க­ளு­ட­னான இந்­தி­யாவின் உறவில் இலங்கை முக்­கிய இடத்தை வகிக்­கின்­றது. இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இந்­திய விஜ­யத்தின் பின்னர் எனது இலங்கை விஜயம் அமைந்­துள்­ளது. மீண்டும் இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­திக்­க­வுள்­ளமை தொடர்பில் நான் மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன். பல கால­மாக இலங்­கை­யு­ட­னான எமது உறவு நீ்டிக்­கின்­றது. நாம் வர­லாறு சம்­பி­ர­தா­யங்கள் மற்­றும விழு­மி­யங்­களை பகிர்­கின்றோம். இரண்டு நாடு­களும் கிரிக்­கட்டை நேசிக்­கின்­றன.
இலங்­கையின் பாரா­ளு­மன்­றத்தில் நான் உரை­யாற்­ற­வுள்ளேன். மகா­போ­திக்கும் விஜயம் செய்­ய­வுள்ளேன். யாழ்ப்­பா­ணத்­துக்கும் விஜயம் செய்­ய­வுள்ளேன். இந்­தி­யாவின் பிர­தமர் ஒருவர் முதற் தட­வை­யாக யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்­கின்­றமை முக்­கிய விட­ய­மாகும். யாழ்ப்­பா­ணத்தில் யாழ்ப்­பாண கலா­சார நிலை­யத்தை நிர்­மா­ணிப்­ப­தற்­காக அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்­பெறும். இந்­திய வீட்டுத் திட்­டத்­தையும் நான் பார்­வை­யி­ட­வுள்ளேன். இலங்­கையின் அபி­வி­ருத்­தியில் உத­வியை செய்­வ­தற்கு இந்­தியா அர்ப்­ப­ணி்ப்­புடன் இருக்கின்றது. இலங்கை மற்றும் இந்திய உறவில் பொன்னான அத்தியாயத்தை நாங்கள் உருவாக்கப்போகின்றோம்"" இவ்வாறு இந்திய பிரதமர் பதிவு செய்துள்ளார்.
இதேவேளை சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில் பல உதவிகளையும் இந்தியா இலங்கைக்கு மோடியின் விஜயத்தின்போது வழங்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க...
இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கை விஜயத்தின் போது உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கான இலங்கைக்கு இந்தியா கடனுதவிகளை வழங்கவுள்ளது என இந்தியாவின் த எகனமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விஜயத்தின் போது படையினருக்கான பயிற்சிகளை வழங்குவது குறித்தும் இந்தியா உறுதிமொழிகளை வழங்கவுள்ளது. சீனாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்காகவே இந்தியா இதனை மேற்கொள்கின்றது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
« PREV
NEXT »