Latest News

March 12, 2015

சட்ட விரோத செயற்பாடுகளுக்கும் எவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை ஆயுதங்கள்?
by admin - 0

www.vivasaayi.com
 எவன்கார்ட்
காலி துறை முகத்தில் இருந்த மஹ நுவர கப்­பலில் நடத்தி வரப்­பட்ட மிதக்கும் ஆயுத களஞ்­சி­ய­சா­லையின் ஆயு­தங்கள் சட்ட விரோத செயற்­பா­டு­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்பட்டுள்­ளதா என்­பது தொடர்பில் விஷேட விசா­ரணை ஒன்­றினை தற்­போது புல­னாய்வுப் பிரி­வினர் மேற்­கொண்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவான் குண­சே­கர தெரி­வித்தார்.
இந்த ஆயுத களஞ்­சிய சாலையில் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஆயு­தங்கள் அனைத்தும் அரச ஆயு­தங்கள் என்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் தலைநகரில் செயற்­பட்ட மற்­றொரு தனியார் பாது­காப்பு நிறு­வ­ன­மான ரக்ன லங்கா என்ற நிறு­வ­னத்­துடன் இந் நிறு­வ­னத்­துக்கு இருந்த ஆயுத ரீதி­யி­லான தொடர்­புகள் குறித்த தகவல்­களும் விசா­ர­ணை­களில் உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக அவர் மேலும் குறிப்­பிட்டார்.
இவ்­விரு நிறு­வ­னங்­க­ளி­னதும் செயற்­பா­டுகள் மற்றும் அவற்­றுக்கு பாது­காப்பு அமைச்­சினால் வழங்­கப்­பட்­டுள்ள அனு­மதி குறித்து சட்ட ரீதியில் பிரச்­சினை உள்­ள­தாக குறிப்­பிட்ட உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவான் குண­சே­கர அந் நிறு­வ­னக்­களின் கீழ் குறிப்­பாக எவன்கார்ட் நிறு­வ­னத்தின் கீழ் இருந்த ஆயு­தங்கள் சட்ட விரோத செயற்­பா­டு­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கலாம் என்ற ரீதியில் அது தொடர்பில் விரி­வான விசா­ரணை ஒன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டினார்.

எவன்கார்ட் மற்றும் லக்ன லங்கா தனியார் பாது­காப்பு நிறு­வ­னங்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் குறித்து கேச­ரி­யுடன் இடம்­பெற்ற நேரடி விஷேட கலந்­து­ரை­யா­ட­லி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இத­னி­டையே ஏற்­க­னவே ரக்ன லங்கா மற்றும் எவன்கார்ட் ஆகிய நிறு­வ­னங்­களின் 5 அதி­கா­ரி­க­ளுக்கு வெளிநாட்டு பயண அனு­மதி மறுக்­கப்­பட்டு பய­ணத்­தடை விதிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் எவன்கார்ட் நிறு­வ­னத்தின் தலைவர் ஓய்வு பெற்ற இரா­ணுவ அதி­காரி நிஸங்க யாப்பா சேனா­தி­ப­தியின் வெளி­நாட்டு பய­ணங்­க­ளுக்கும் நீதி­மன்றம் நேற்று தடை விதித்­தது. சட்ட மா அதிபர், குற்றப் புல­னாய்வுப் பிரிவு ஆகி­யன அவரின் வெளி நாட்டு பிர­யா­ணங்­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்த நிலை­யி­லேயே கொழும்பு பிர­தான நீதிவான் அவரின் வெளி நாட்டு பய­ணங்­க­ளுக்கு அனு­மதி மறுத்தார்.

எவன்கார்ட் நிறு­வனம் தொடர்பில் காலி நீதிவான் நீதி­மன்­றிலும் ரக்ன லங்கா விவ­காரம் தொடர்பில் கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்­றிலும் வெவ்வே­றாக வழக்­குகள் இடம்­பெற்று வரும் நிலையில் அவ்­விரு நிறு­வ­னங்­களும் ஆயுத பரி­மாற்றம் உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­களில் ஒன்­றுடன் ஒன்று இணைந்து செயற்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் குறிப்­பிட்­டனர்.
முன்­ன­தாக காலி நீதிவான் நிலு­புலீ லங்­கா­புர முன்­னி­லையில் குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரி­வினர் மிதக்கும் ஆயு­தக்­க­ளஞ்­சி­ய­சாலை தொடர்பில் விசேட அறிக்­கை­யொன்றை சமர்ப்­பித்து மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக அத­னுடன் தொடர்­பு­டைய மூவரின் வெளி­நாட்­டுப்­ப­ய­ணங்­களை தடை­செய்­தனர். முன்னாள் பாது­காப்­புச்­செ­ய­லாளர் கோத்தபாய ராஜ­பக் ஷ , 2011 முதல் 2012 செப் டெம்பர் வரை கடற்­படை தள­ப­தி­யாக இருந்ததற்­போ­தைய எவன்கார்ட் நிறு­வ­னத்தின் உத­வித்­த­லை­வரும் ஆலோ­ச­கர்­களின் ஒரு­வ­ரு­மான அட்­மிரல் சோம­தி­லக்க திஸா­நா­யக்க, எவன்கார்ட் நிறு­வ­னத்தின் நிரு­வாகப் பணிப்­பாளர் ஓய்­வு­பெற்ற பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் கித்­சிறி மஞ்­சு­ள­கு­மா­ர­யாப்பா, ஆகி­யோரின் வெளி­நாட்­டுப்­ப­ய­ணங்­க­ளுக்கே இவ்­வாறு தடை விதிக்­கப்­பட்­ட­து.

இத­னை­விட ரக்ன லங்கா ஆயுத களஞ்­சி­ய­சாலை தொடர்பில் ரக்­ன­லங்கா தனியார் பாது­காப்பு நிறு­வ­னத்தின் பணிப்­பாளர் மேஜர் ஜெனரல் கரு­ணா­ரத்ன பண்டா அதி­காரி எகொ­ட­வெல, மற்­றொரு பணிப்­பா­ள­ரான மேஜர் ஜெனரல் விஜேகோன் பண்­டார ஆகி­யோரின் வெளி நாட்டு பய­ணங்­க­ளை­கொ­ழும்பு நீதி­மன்றம் தடை செய்­தது.

இந் நிலை­யி­லேயே இவ்­விரு தனியார் பாது­காப்பு நிறு­வ­னங்கள் தொடர்­பிலும் விசா­ர­ணை­க­ளுக்­காக புல­னாய்வுப் பிரி­வினர் அறு­வரின் வெளி நாட்டு பய­ணங்­களை நீதி­மன்ற உத­வி­யுடன் தடை செய்­துள்­ளனர்.
« PREV
NEXT »