Latest News

March 10, 2015

பெரிய நீலா­வ­ணையில் படை­மு­கா­முக்கு அருகில் கரை­யொ­துங்­கிய ஆணொ­ரு­வரின் சடலம்
by admin - 0

கல்­முனைப் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பெரிய நீலா­வணை கடற்­க­ரையில் 25 வயது மதிக்கத் தக்க ஆணொ­ரு­வரின் சடலம் கரை­யொ­துங்­கி­யுள்­ள­தாக கல்­முனைப் பொலிஸார் தெரி­வித்­தனர்.

பெரிய நீலா­வணை சரஸ்­வதி வீதி, படை­மு­கா­முக்கு அருகில் உள்ள கடற்­க­ரை­யோ­ரத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை காலை சடலம் கரை­யொ­துங்­கி­யுள்­ளது. ஸ்தலத்­திற்கு விஜயம் செய்த கல்­முனை நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி அந்­தோ­னிப்­பிள்ளை ஜூட்சன் சட­லத்தைப் பார்­வை­யிட்­ட­தோடு பிரேத பரி­சோ­த­னைக்­காக சட­லத்தை அம்­பாறை வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைக்­கு­மாறும் பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்டார்.
சட­லத்தில் ஆங்­காங்கே காயங்கள் காணப்­ப­டு­கின்­றன, சட­லத்தை அடை­யாளம் காண பொது­மக்கள் உத­வு­மாறு கேட்டுக் கொள்­ளப்­ப­டு­கின்­றார்கள்.

தற்பொழுது தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் மற்றும் கடத்தப்பட்டவர்களை இராணுவம் கொலைசெய்து கடலில்  வீசிவிடுகிறதோ என்ற சந்தேகம் இதனால் உருவாகியுள்ளதாக விவசாயின் அரசியல் செய்திப்பிரிவின் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கல்­முனை பொலிஸ் நிலை­யத்தின் குற்றத் தடுப்புப் பிரி­வுக்குப் பொறுப்­பான பொலிஸ் பொறுப்­ப­தி­காரி கே.எம்.டபிள்யூ. இந்துனில் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
« PREV
NEXT »