Latest News

January 09, 2015

புதிய ஜனாதிபதிக்கு பிரித்தானியா மற்றும் இந்திய பிரதமர் வாழ்த்து தெரிவிப்பு !
by Unknown - 0

இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரித்தானியா தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. பிரித்தானிய வெளியுறவு செயலாளர் பிலிப் ஹாமன்ட் சிறிசேனவுக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்ட உங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக ஹாமன்ட் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் இலங்கை நிலையான சமாதானமே எதிர்காலத்துக்கு அவசியமானது என்ற அடிப்படையில் அதற்கான வழிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதேநேரம் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட பிரித்தானிய அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் ஹாமன்ட் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை ,

மைத்திரிபால சிறிசேனவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தொலைபேசியினூடாக அழைத்தே இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய பிரதமர் தனது டுவிட்டரில் இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாவது
 
நான் தொலைபேசியில் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாழ்த்து தெரிவித்தேன். அமைதியான ஜனநாயக தேர்தலை நடத்தி முடித்த இலங்கை மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தேன்.
 
ஒரு நெருங்கிய நண்பன், அயல்நாடு என்ற வகையில் இலங்கையின் சமாதானம், ஒற்றுமை, அபிவிருத்தி, செழிப்புக்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும்´ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
« PREV
NEXT »