Latest News

January 09, 2015

பாரிஸில் துப்பாக்கி சூடு நாடத்திய தீவிரவாதிகள் போலிசாரால் சுத்திவளைப்பு !
by Unknown - 0

பாரிஸின் வடகிழக்கே சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அச்சு நிறுவன கட்டிடமொன்றில் நுழைந்துள்ள ஷார்லி எப்தோ பத்திரிகை ஊழியர்களைக் கொன்றதாக கருதப்படும் நபர்கள் இருவருடனும் பொலிசார் பேசியுள்ளதாக பிரஞ்சு ஊடகச் செய்திகள் கூறுகின்றனர்.

இவர்கள் ஒருவரை பணயக் கைதி ஒருவரைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிர் துறக்கத் தயாராக இருப்பதாக அந்த சகோதரர்கள் கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இருவரும் பாரிஸுக்கு வடமேற்கே ஒரு பகுதியில் பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.

பாரிசுக்கு வட கிழக்காக 42 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தம்மார்டின் ஆன் கொயெல் என்ற ஊரின் விளிம்பில் உள்ள ஒரு கட்டிடத்தில் இவர்களை பொலிசார் சுற்றி வளைத்ததாக பிரஞ்சு பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சந்தேகநபர்கள் சிலரை அவர்கள் பணயக் கைதிகளாக பிடித்துவைத்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தேடப்பட்டுவந்த இருவருக்கும் பொலிசாருக்கும் இடையே நடந்துவரும் துப்பாக்கிச்சூட்டில் சிலர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதி நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தவிர பாரிஸின் சார்ல்-த-கோல் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் விமானப் தரையிறக்கமோ, விமானம் கிளம்புவதோ ரத்தாகவில்லை.
« PREV
NEXT »