வெள்ளவத்தையில் நாளை செவ்வாய்க்கிழமை காலையும் மாலையும் ஒன்பது மணிநேரம் ஒருவழி போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன என்று போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.
காலை 6 மணி முதல் 11 மணிவரையும் மாலை 3 மணியிலிருந்து 7 மணிவரையும் ஒருவழி போக்குவரத்து சேவை நடைபெறும்.
இராமகிருஷ்ணன் வீதி, காலி வீதியிலிருந்து கடற்கரை வீதியுள்ள விவேகானந்தா மாவத்தை, கடற்கரை வீதியிலிருந்து காலி வீதி ஆகியவற்றிலேயே மேற்குறிப்பிட்ட நேரங்களில் ஒருவழி போக்குவரத்து சேவை நடத்தப்படும்.
Social Buttons