Latest News

January 20, 2015

தமிழ் மக்­களின் துயர் துடைப்­ப­தற்கு முன்­வந்­துள்ள புலம்­பெயர் அமைப்­புகள்
by admin - 0

இந்த நாட்­டிலே ஏற்­பட்ட அசா­தா­ரண சூழ்­நிலை கார­ண­மாக எமது உற­வு­களில் பெரும்­பா­லானோர் தமது உற­வு­களை இழந்து வித­வை­களா­கவும், அநா­தை­க­ளா­கவும், வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­களின் துயர்­து­டைக்க புலம்­பெயர் அமைப்­புக்கள் பல இன்று எமக்­காக நேசக்­கரம் நீட்ட முன்­வந்­தி­ருக்­கின்­றமை பாராட்­டத்­தக்க விட­ய­மாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் த.கலை­ய­ரசன் கூறினார்.
நாவி­தன்­வெளி ஸ்ரீ முரு­க­னா­லய முன்­ற லில் நடை­பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
இந்­நி­கழ்வில் நாவி­தன்­வெளி பிர­தேச சபையின் தவி­சாளர் எஸ்.குண­ரெத்­தினம் மற் றும் உறுப்­பி­ன ர்­க­ளான தேவன், பிள்­ளை யான் தம் பி, கல்­முனை மாந­க­ர­ச­பையின் உறுப்­பி­னர்­க­ளான எஸ்.ஜெயக்­குமார் கம­ல ­தாசன், கிராமப் பெரி­யார்கள் எனப்­ப­ல ரும் கலந்­து­கொண்­டனர்.
அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்,
நேற்­று முன்­தினம் வாழ்­வா­தார உத­விகள் வழங்கும் திட்­டத்தின் கீழ் சூரிச்­ சிவன் கோயில் சைவத்­தமிழ் சங்­கத்தின் அன்பே சிவம் அமைப்பு வறிய மக்­க­ளுக்கு பல்­வேறு உத­வி­களை வழங்கி வரு­கின்­றது.
இந்த நாட்­டிலே தொன்று தொட்டு தமி­ழினம் வாழ்ந்து வரு­கின்­றது. இதற்­கான ஒரு கலா­சாரம் இருக்­கின்­றது. அத­ன­டிப்­ப­டை­யி­லேதான் எமது கலா­சா­ரத்தை பின்­பற்றி இந்து மத அனுட்­டா­னங்­களை கடைப்­பி­டி த்து வாழ வேண்­டி­யது ஒவ்­வொ­ரு­வ­ரி­ன தும் கட­மை­யாகும். இந்­நி­லையில் இந்து மதத்தில் இருக்­கின்ற இளை­ஞர்கள் யுவ­தி­களும் மத­மாற்­றத்­திற்கு உள்­ளா­வதை நாம் அனை­வரும் சேர்ந்து தடுத்து நிறுத்­து­வ­த ற்கு முன்­வர வேண்டும்.
வட­கி­ழக்கு மாகா­ணங்­களை பொறுத்த வரையில் தமி­ழர்கள் அன்­றி­லி­ருந்து இன்று வரைக்கும் பல துன்­பங்­களை அனு­ப­விப்­ப­வர்­க­ளா­கவே வாழ்ந்து வரு­கின்­றார்கள். இவர்­க­ளுக்­கான எந்த நிவா­ர­ணங்­க­ளையும் இந்த அர­சாங்­கங்கள் பெற்­றுக்­கொ­டுத்­த­தற்­கான சரித்­தி­ரமே கிடை­யாது அவ்­வா­றான சூழ­லில்தான் எமது சமூகம் இன்று வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.
இதனை அறிந்து எமது மக்­களின் துயர்­து­டைக்க புலம்­பெயர் தேசத்தில் இருக்கும் எமது உற­வுகள் அவர்கள் மூலம் அந்த நாட்டில் உள்ள மக்­க­ளிடம் சேக­ரிக்­கப்­ப ட்ட பணத்­தை ஒன்று திரட்­டியே எமது மக்­க­ளுக்­காக அனுப்பி வைக்­கின்­றார்கள். அவர்கள் அனுப்பும் பணத்­தை நாங்கள் உரிய முறையில் பயன்­ப­டுத்த அதன்­மூலம் எங்­க­ளது வாழ்­வா­தா­ரத்­தை உயர்த்த வேண்டும். அவ்­வாறு செய்யும் பட்­சத்­திலே மேலும் அவர்கள் வாழ்­வா­தார உத­விக்­காக வேண்டி உத­விக்­கரம் நீட்ட முன்­வ­ரு­வார் கள்.
அவர்­க­ளது பணத்­தை பெற்றுக்கொண்டு அதனை வீண்விரயம் செய்ய முற்படுவீர்க ளேயானால் அவர்களுக்கு செய்யும் மிகப் பெரும் துரோகம் என்றே கூறமுடியும். அவ் வாறு இல்லாமல் இப்பணத்தை வைத்து உங்களது எதிர்காலத்திற்கு உகந்த வாழ் வாதார திட்டத்தை மேற்கொள்வதற்கு நீங் கள் முன்வர வேண்டும் என்றார்.
« PREV
NEXT »