Latest News

January 20, 2015

அம்பாறை மாவட்ட விவசாயிகளின் போராட்டத்திற்கு முடிவு எப்போது?
by admin - 0

அழிவு, ஆற்­றுநீர் பாய்ச்சல், அறு­வடை ஆகிய மூன்று விட­யங்­க­ளையும் அம்­பாறை மாவட்ட விவ­சா­யிகள் இம்­முறை சம­கா­லத்தில் எதிர்கொண்­டுள்­ளனர்.
சில தினங்­க­ளுக்கு முன்­பாக ஆரம்­ப­மான வேளாண்மை அறு­வடை மிகவும் மும்­மு­ர­மாக இடம்­பெற்று வரு­கின்­றது. பல­ருக்கு இவ்­வா­று­வடை மூலம் சுமா­ரான விளைச்­சலும் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.

அதே­வேளை ஒரு மூடை நெல்­லுக்­கான விலை தரத்­திற்­கேற்ப ரூபா 2200 தொடக்கம் ரூபா 2500 வரை­யான பணம் கிடைப்­ப­தா­கவும் தெரிவிக்­கப்­ப­டு­கின்றது.
இன்னும் சில விவ­சா­யி­க­ளு­டைய விவ­சாய நிலங்கள் கடந்த கால வெள்ளப்­பெ­ருக்­கினால் அழி­வுற்­ற­துடன் தற்­போது நிலவும் அதிக வரட்­சியால் முற்­றாக அழிவடைந்து­ அறு­வடை செய்ய முடி­யாமல் பாரிய நஷ்­டத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இவ்­வ­ரட்சி இன்னும் ஒரு வாரத்­திற்கு நீடிக்கும் பட்­சத்தில் நீர்ப்­பாய்ச்சல் வழங்க முடி­யாத ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் நிலங்கள் பாதிப்­புக்குள்­ளாகும் நிலையும் உரு­வா­கி­யுள்­ளது.
மேலும் சில விவ­சா­யிகள் உள்­ள­வற்­றை­யா­வது காப்­பாற்­றுவோம் எனும் நோக்கில் நீர்ப்­பாய்ச்சல் வழங்கக் கூடிய இடங்­களில் ஆற்று நீரினை பாய்ச்­சு­கின்ற முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ளனர்.
எல்­லா­வற்­றுக்கும் மேலாக யானைகளின் தாக்­கு­தலில் இருந்து தங்­க­ளது வயல் நிலங்­களை பாது­காக்­கின்ற பணி­களில் இரவு ­ப­க­லாக விவ­சா­யிகள் ஈடு­பட்­டுள்­ள­மை­யையும் இங்கு அவ­தா­னிக்க முடி­கின் ­றது.
இவ்­வாறு இவ்­வ­ரு­டத்தின் பெரும்போகத்தில் அம்பாைற மாவட்ட விவசாயிகள் பல்வேறு வகையான
சம்பவங்களையும் எதிர்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டப் படவேண்டியதாகவும் உள்ளது.
« PREV
NEXT »