நேற்று காலி துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பலை, பொலிசார் சுற்றி வளைத்து தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார்கள். இதில் வெளிநாட்டினர் பலர் இருந்ததாக, விவசாயியின் காலி செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த ஆயுதக் கப்பலை பொலிசார் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவேளை, பரபரப்புடன் காணப்பட்ட இவர்கள் யாருடனோ தொடர்புகொள்ள முயன்றனர் இருப்பினும் எதுவும் பலிக்கவில்லை. பொலிசார் அனைவரையும் கைதுசெய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
ஆயுதங்களை வைத்திருந்த காரணத்திற்காக இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என்று மேலும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஶ்ரீலங்கா பரபரப்புடன் காணப்படுவதாகவும் தற்போது மைத்திரி பக்கம் உள்ள சிலரே இதனைக் கண்டுகொள்ளவேண்டாம் என்று கூறிவருகிறார்களாம். ரஷ்யா , இந்தியப் பெருங்கடலில் செய்யும் ஆயுத “நெட்வேர்க்” இது என்று கூறுகிறார்கள். இதில் பெரும் பங்கு கோட்டபாய ராஜபக்ஷவுக்கும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
No comments
Post a Comment