Latest News

January 30, 2015

வடக்கில் இராணுவ முகாம்களுக்கு கல்வீச்சு நடத்தி ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி முழுமையான விசாரணை நடத்த உத்தரவு என்கிறது அரசாங்கம்
by admin - 0

Army
Army
வடக்கில் இரா­ணுவ முகாம்­க­ளுக்கு கல்­வீச்சு தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு குழப்­பத்தை ஏற்­ப­டுத்தி அதன் மூலம் தெற்கில் மக்கள் மத்­தியில் இன­வா­தத்தை பரப்பி எதிர்­வரும் ஏப்ரல் மாதத்தில் ஆட்­சியை கைப்­பற்ற முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது. இதற்­காக வடக்கில் 400 இரா­ணு­வத்­தினர் பயிற்­று­விக்­கப்­ப­டு­வ­தாக எங்­க­ளுக்கு தகவல் கிடைத்­துள்­ளது என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித்த சேனா­ரட்ன தெரி­வித்தார்.
இது தொடர்பில் முழு­மை­யான விசா­ரணை நடத்த உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது என் றும் அவர் குறிப்­பிட்டார்.
அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்
வடக்கில் இரா­ணுவ முகாம்­க­ளுக்கு கல்­வீச்சு தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு குழப்­பத்தை ஏற்­ப­டுத்தி அதன் மூலம் தெற்கில் மக்கள் மத்­தியில் இன­வா­தத்தை பரப்ப சிலர் திட்­ட­மிட்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு தெற்கில் இன­வா­தத்தை பரப்பி எதிர்­வரும் ஏப்ரல் மாதத்தில் ஆட்­சியை கைப்­பற்ற முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது.
இதற்­காக வடக்கில் 400 இரா­ணு­வத்­தினர் பயிற்­று­விக்­கப்­ப­டு­வ­தாக எங்­க­ளுக்கு தகவல் கிடைத்­துள்­ளது. இரா­ணுவ அதி­கா­ரி­களே எமக்கு இது குறித்து தக­வல்­களை வழங்­கினர். இது தொடர்பில் முழு­மை­யான விசா­ரணை நடத்த உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.
வடக்கில் இவ்­வாறு இரா­ணுவ முகாம்­க­ளுக்கு கல்­வீச்சு தாக்­கு­தல்­களை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் தெற்கு மக்­க­ளி­டையே குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வதே இவர்­களின் நோக்கமாக உள்ளது. இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் தேசிய நிறைவேற்று சபை யிலும் கலந்துரையாடப்பட்டது. அதன்படி முழுமையான விசாரணை நடத்த தீர்மா னிக்கப்பட்டது என்றார்.
« PREV
NEXT »