ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தோல்வி கண்டதால் அராசங்கத்துடன் இயங்கிய ஆயுதக் குழுக்கள் பல மிளிர்ந்துள்ளது. குறிப்பாக இராணுவ புலனாய்வு பிரிவின் கிழக்கு மாகாண பொறுப்பாளராக இருந்த சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவருடைய முன்னாள் போராளிகள் மற்றும் கொலை, கொள்ளை, கடத்தலுக்கு பயன்படுத்திய இளைஞர் குழு, இவர்களுக்கு இராணுவ புலனாய்வு பிரிவின் மூலம் மாதாந்தம் ஒரு தொகை நிதியை வழங்கி வந்தது.
கோட்டபாய ராஜபக்ஷவின் ஆதரவுடன் இவர்களுக்கு இரசகியமாக ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மைத்திரி பால சிறிசேன ஆட்சியை குழப்பும் வகையில் மீண்டும் கொலை, கொள்ளை, கடத்தல்களை மேற்கொண்டு மக்களை பீதியடைய செய்தால் எதிர்வரும் ஏப்பிரல் மாத தேர்தலின் பின் மகிந்தவின் அரசாங்கத்தை கொண்டுவர முடியும் என தீர்மானித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிள்ளையானுடன் தொடர்பு கொண்டு இந்நடவடிக்கையை மேற்கொள்ள ஆலோசனை வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் தனது தோல்வி வடக்கு கிழக்கு மக்களாலேயே நிகழ்ந்தது. அவர்களை அச்சுறுத்தினால், மீண்டும் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் தமது அரசாங்கத்தை மீண்டும் கொண்டு வர முடியும் என பிள்ளையானுக்கு மகிந்த தெரிவித்துள்ளார்.
அத்தோடு முஸ்லிம்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தவும், ஹிஸ்புல்லா மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ஹிஸ்புல்லா பிள்ளையானுடன் சேர்ந்து இச்செயற்பாட்டுக்கு உதவ உறுதி வழங்கியுள்ளார். கொலை, கொள்ளை, கடத்தல் நடைபெற்றால் புலிகள் மீண்டும் தோன்றி விட்டனர் என்ற ஒரு பொய் பிரச்சாரத்தை கொண்டு மைத்திரி ஆட்சியையும், வடக்கு கிழக்கு தமிழ் மக்களையும் அச்சுறுத்த முடியும் என கூறியுள்ளனர்.
முன்பு பிள்ளையானால் சிலருக்கு ஆயுதங்கள் விற்கப்பட்டன. அவர்களிடம் மீண்டும் ஆயுதங்களை பெற பிள்ளையான் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார். இவ்வளவு காலமும் தாங்கள் மறைத்து வைத்த ஆயுதங்களையும் எடுக்க ஏற்பாடு செய்துள்ளான். மேலும் இராணுவ புலனாய்வு பிரிவினரும் பிள்ளையானிடம் சில ஆயுதங்களை வழங்கியுள்ளனர்.
பிள்ளையானுடன் பண ரீதியாக பிரச்சனை பட்டு வெளியேறிய செல்லம் தியட்டர் மோகன் நீண்டகாலமாக இராணுவ புலனாய்வு பிரிவுடன் செயற்பட்டு வருவது எல்லோரும் அறிந்ததாகும். இராணுவ புலனாய்வு பிரிவின் ஆலோசனையுடனையே முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பாட்டை மோகன் ஆரம்பித்தார்.
தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளே நுழைந்து முஸ்லிம்களை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஓரம் கட்ட நடவடிக்கை எடுக்கவும் செல்லம் தியட்டர் மோகனை இராணுவ புலனாய்வு (கோட்டபாய) ஏற்பாடு செய்துள்ளது.
இதேவெளை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சியில் இருந்து வெளியேறும் போதும் பெருந்தொகையான பணத்தை எடுத்துச் சென்றுள்ளது. குறிப்பாக தற்போது வங்கிகளில் ஐயாயிரம் ரூபாய் பணம் பெறமுடியாமல் உள்ளது. அதிகப் படியாக பெறுமதியாக பணமாக ஐயாயிரம் ரூபாய் தாள் புளங்கியது. அது தற்போது வங்கியில் இல்லை. ராஜபக்ஷ சகோதர்களால் எடுக்கப்பட்டு விட்டது என புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
No comments
Post a Comment