மூன்று புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுடன் கே.பி என்ற குமரன் பத்மநாதன் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
அவர்கள் எங்கு சென்றனர், எந்த விமானத்தில் சென்றனர் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவர்கள் விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் செல்லும் போது ஒரே ஒரு பாதுகாப்பு அதிகாரி மாத்திரமே அங்கு பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
குமரன் பத்மநாதனை நாட்டில் இருந்து வெளியே அழைத்துச் செல்லும் போது அடையாளம் காணமுடியாதபடி விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குமரன் பத்மநாதன் மலேசியாவில் கைது செய்யப்பட்டதுடன் அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அவர் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமல் விடுவிக்கப்பட்டார். அவ்வப்போது நடத்தப்பட்ட தேர்தல்களின் போது பத்மநாதன் அரசாங்கத்தின் பிரதிநிதியாக வடக்கில் செயற்பட்டார்.
இம்முறையும் இறுதி வரை வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதியின் தேர்தல் பணிகளுக்கு அவர் பங்களிப்பு வழங்கி வந்தார்.
No comments
Post a Comment