முன்னாள் ஜே.வீ.பீ உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான லொக்கு அத்துள அலரி மாளிகையில் மரணம் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது.
விஜயமுனி தேவகே நிமால் ஜெயசிங்க என்ற லொக்கு அத்துள ஜேவீபியின் 1971 காலத்தில் இருந்து முக்கிய இடத்தில் 4 ஆவது இடத்தில் அவ் அமைப்பை வழி நடத்தியவர்…
மிகவும் திடகாத்திரமான அவர் காராட்டியில் புகழ் பெற்றவர்.
JVP இருந்து விலகி சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்த இவர் எரிபொருள் சக்தி இணை அமைச்சராக பதவி வகித்தவர்.. தற்போதைய கம்பகா மாவட்ட அமைப்பாளராக இருந்த இவர் மைத்திரிபால சேனநாயக்கவை ஆதரிக்கும் முடிவில் இருந்த வேளை அலரிமாளிகைக்கு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 29 ஆம் திகதி பேச்சுவாத்தைக்கு அழைக்கப்பட்ட இவர் மர்மமான முறையில் இறந்ததாகவும் இறப்புக்கான காரணம் சரியான முறையில் வெளிவரவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இவரின் மரணத்தில் பலத்த சந்கேகங்கள் ஏற்படுவதில் நியாயம் இருக்கிறது அதாவது கைது செய்யப்படும் தமிழர்களை பின் விடுவித்து விபத்து, திடிரென மாரடைப்பால் இறப்பார்கள் இது சிங்கள இராணுவத்தின் தமிழர்கள் அழிப்பு மறைமுக நடவடிக்கை அதுபோல் இந்த அமைச்சரும் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது
polls & surveys
Social Buttons