இது தொடர்பில் தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி உட்பட பாதிக்கப்பட்ட 11 பேரும் தனித்தனியான வழக்குகளை நொர்தேன் பவர் நிறுவனம், மற்றும் உத்துரு ஜனனி திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர்.
அது தொடர்பான வழக்கும் நடைபெற்று வருகின்றது. இந்த விடயம் தொடர்பாக பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில், தற்போது மல்லாகம் காட்டுத்தரை பகுதியிலுள்ள கிணறுகளிலும் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதால் அதனை அண்மித்த பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மழை பெய்து வருவதால் எண்ணெய்க் கசிவுகள் இலகுவாக பரவி வருகின்றது. இது தொடர் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் எதிர்காலத்தில் சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.
குறித்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க யாரும் முன்வரவில்லை. தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். மின்சார சபையிலிருந்து வெளிவரும் அதிக ஒலியால் அயலிலுள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் காலங்களில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாக பிரதேச மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Post a Comment