சிரியாவில் 70 பழங்குடியின மக்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.
இந்நிலையில் சிரியாவில் டெல் அல்-ஷோயர் மாகாணத்தில் அல்-பாஹ்ரா கிராமத்தில் உள்ள புதைக்குழி ஒன்றில் 70 பேரின் பிணங்கள் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவை அப்பகுதியை சேர்ந்த அல்–ஷீஅய்டட் மலை வாழ் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் ஆவார்.
மேலும் புதைக்கப்பட்டவர்களின் உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் உள்ளன மற்றும் பலரது தலை துண்டிக்கப்பட்டுள்ளது.
Social Buttons