ஈழநாடு பத்திரிகை அலுவலகம் பொதுநூலக எரிப்பையடுத்து தீக்கிரையாக்கப்பட்ட போது அதனுள் அகப்பட்டு தீக்காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார். அவரது எரியுண்ட கால் இச்சம்பவத்தின் சின்னமாக இருந்து வந்திருந்தது.
ஆரம்பம் முதல் இலங்கை வானொலியின் யாழ்.பிராந்தியச் செய்தியாளராக இருந்து வந்த இவர் பின்னர் யாழ்.வானொலியின் யாழ்.செய்தியாளராகவும் கடமையாற்றி வந்தார்.
'ஜோஸ்யர்' சோதிடப்பத்திரிகையின் ஆசிரியரான இவர் சிறந்த அறிவிப்பாளருமாவார். ஊடகத்துறையில் பல்வேறு விருதுகளைப் பெற்றிருந்த இவர் சிறந்த சமூக சேவையாளருமாவார். இந்திய அமைதிப்படை காலத்திலும் அதன் பின்னரான ஊடக நெருக்கடி காலங்களிலும் யாழ்ப்பாணத்திலேயே அவர் தங்கியிருந்து பணியாற்றியிருந்தார்.
அன்னாரின் பூதவுடல் யாழ்ப்பாணம் சுண்டுக்குழி விதானையார் ஒழுங்கையிலுள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளது.
No comments
Post a Comment