Latest News

September 09, 2014

கல்வியங்காட்டில் பற்றி எரிந்தது மோட்டார் சைக்கிள்
by admin - 0

கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட பெற்றோல் ஒழுக்கினால் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
9/9/2014 இன்று பி.ப 1.30 மணியளவில் கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக ஏற்பட்ட பெற்றோல் ஒழுக்கினால் மோட்டார் சைக்கிள்தீப்பிடித்து எரிந்து சேதங்களுக்குள்ளாகியது.
இதில் மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை.எனினும் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிளை பொதுமக்கள் தண்ணீர்,மணல் கொண்டு அணைத்தனர்.   இதேவேளை கடந்த வாரமும் இதே போன்று ஆட்டோ ஒன்று தீப்பிடித்து எரிந்தது. அத்துடன் கடந்த வருடமும் குறித்த இடத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்து ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments