Latest News

September 09, 2014

ஐநா விசாரணையை நிராகரிக்கிறோம் -மனித உரிமை கூட்டதொடரில் இலங்கை
by Unknown - 0

இலங்கைக்கு எதிரான சர்வதேச போர்க்குற்ற விசாரணை குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை இலங்கை இன்றும் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன் மனித உரிமை நடவடிக்கையாளர்கள் பழிவாங்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் இலங்கை நிராகரித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெறும் 27வது வழமையான அமர்வில் இன்று உரையாற்றிய இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, இலங்கை தொடர்ந்தும் சர்வதேசத்துடன் இணைந்திருக்கும் என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் கொண்டு வந்து நிறைவேற்றிய பிரேரணையை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கை அரசாங்கம் போர் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை தொடரவுள்ளது. அத்துடன் நாளை சாட்சி பாதுகாப்பு பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் ரவிநாத் ஆரியசிங்க கூறினார்.
ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணையானது, வரையறை மீறிய செயற்பாடு என்பது மட்டுமல்லாது இலங்கையின் உள்நாட்டு விசாரணையையும் மலினப்படுத்துகிறது.
அத்துடன் ஐக்கிய நாடுகளிள் விசாரணையானது, இலங்கை மக்கள் மற்றும் சமூகங்களின் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்வதாக ரவிநாத குறிப்பிட்டார்.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் புதிய மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் பின் ராட் அல் ஹுசைனின் தலைமையில், மனித உரிமைகள் அலுவலகம், கலாசாரம் மற்றும் சமூக விடயங்களை கருத்திற்கொண்டு ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று தமது நாடு எதிர்ப்பார்ப்பதாகவும் ரவிநாத் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »