இலங்கையில் இருந்து பிரித்தானியா வீசாவுக்கு விண்ணப்பிப்போருக்காக இன்று புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இது கடவுச்சீட்டை திரும்ப வழங்கும் ( passport-back service) சேவை என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.
புதிய அறிமுகத்தின்படி வீசாவுக்காக ஆவணங்களை சமர்ப்பிப்போர் வீசா தயாரிப்பு நடைபெறும் பெரும்பாலான காலத்தில் தமது கடவுச்சீட்டை தம்வசம் வைத்திருக்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி சுற்றுலா, வியாபாரம் உட்பட அடிக்கடி பிரித்தானியாவுக்கு சென்று திரும்புவோரும் இதில் உள்வாங்கப்படுவார்கள். இதேவேளை இந்த திட்டத்துக்காக 9400 ரூபா மேலதிக கட்டணமாக அறவிடப்படவுள்ளது.
Social Buttons