அவுஸ்திரேலிய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் மீண்டும் அறிவித்துள்ளது.
கடலில் புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்து மீளவும் நாடு கடத்தும் செயன்முறை, புகலிடக் கோரிக்கையாளர் சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என தெரிவித்துள்ளது.
கடலில் வைத்து புகலிடக் கோரிக்கையாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது நியாயமானதாக அமையாது என ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் சர்வதேச பாதுகாப்புப் பிரிவு பணிப்பாளர் வோல்கர் டுருக் தெரிவித்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பிலான அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புகலிடக் கோரிக்கையாளர் கொள்கைகள் உலகின் ஏனைய நாடுகளுக்கு பிழையான செய்தியை சொல்லக் கூடுமென அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
Social Buttons