Latest News

July 15, 2014

இலங்கை வருகிறார் இந்திய விமானப்படைத் தளபதி!
by Unknown - 0

இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் அருப் ரஹா மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

இரு நாட்டு இராணுவ உறவை வலுப்படுத்தும் விதத்திலேயே இவரது விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
இவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, மற்றும் முப்படைத் தளபதிகளையும் சந்திக்கவுள்ளார்.
 
அத்துடன் இலங்கை விமானப்படை பயிற்சித் தளங்களையும் இந்திய விமானப் படைத் தளபதி பார்வையிடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »