யாழ்பாண அரசியல்வாதிகள் முதுகெலும்பற்றவர்கள்; தனியாகவே போராடினேன் - அனந்தி சசிதரன்!!!
கொல்லப்பட்ட உறவினர்களுக்குக் அஞ்சலிசெலுத்த (பிதிர் கடனை நிறைவேற்றுவதற்காக) கீரிமலை கடற்பகுதிக்கு சென்ற அனந்தி சசிதரனை இராணுவம் இடைவழியில் தடுத்து நிறுத்தி மிரட்டியது.
அதற்கெதிரான போராட்டத்தை தனியாளாக அவர் முன்னெடுத்தார்.
கீரிமலைக்குச் செல்லும் வழியிலிருந்து வீடு திரும்பிய அனந்தி சசிதரன், நல்லூர் கோவிலில் நடந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டதாகத் தொலைபேசியில் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அரசியல் வாதிகள் முதுகெலும்பற்றவர்கள் என்றும் தன்னோடு யாரும் ஒத்துழைக்கவில்லை என்றும் தனியாகவே போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் தெரிவித்தார்.
Social Buttons