Latest News

January 17, 2014

நாட்டில் ஊடக சுதந்­தி­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும்
by admin - 0

இலங்­கையில் ஊடக சுதந்­திரம் உரிய வகையில் பேணப்­ப­டு­வ­தில்லை என்ற குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்ந்தும் நில­வி­வ­ரு­கின்­றன. ஆனால் இந்தக் குற்­றச்­சாட்­டுக்­களை தொடர்ந்தும் மறுத்­து­வரும் அர­சாங்கம் ஊட­கங்­களை சுதந்­தி­ர­மாக செயற்­ப­டு­வ­தற்கு தான் அனு­ம­தித்­துள்­ள­தாக அடிக்­கடி தெரி­வித்து வரு­கின்­றது. யுத்த காலத்தில் எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் ஊடக சுதந்­திரம் என்­பது பெரும் கேள்­விக்­கு­றி­யான விட­ய­மா­கவே மாறி­யி­ருந்­தது.
யுத்தம் தொடர்­பான செய்­தி­க­ளுக்கு தடைகள், தணிக்­கைகள் விதிக்­கப்­பட்­டன. ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­கவின் ஆட்­சிக்­கா­லத்தில் செய்­தித்­த­ணிக்கை நடை­மு­றைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இத­னைத்­தொ­டர்ந்து இறுதி யுத்­த­கா­லத்தின் போதும் யுத்த செய்­தி­க­ளுக்கு தடை­களும் தணிக்­கை­களும் விதிக்­கப்­பட்­டன. ஊடக சுதந்­திரம் என்­பது ஒட்­டு­மொத்­த­மாக நசுக்­கப்­படும் நிலை காணப்­பட்­டது.
2000ஆம் ஆண்டு யாழ்ப்­பா­ணத்தில் ஊட­க­வி­ய­லாளர் நிம­ல­ராஜன் சுட்­டுக் ­கொல்­லப்­பட்டார். அதனைத் தொடர்ந்து ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான ஜி. நடேசன், டி. சிவராம், சுகிர்­த­ராஜன், சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­கி­ர­ம­துங்க உட்­பட பல ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டனர். இத்­த­கைய படு­கொ­லைகள் ஊடக சுதந்­தி­ரத்தை பெரும் கேள்­விக்­கு­றி­யாக மாற்­றி­யி­ருந்­தது.
தொடர்ந்தும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­ட­மையும் அச்­சு­றுத்­தப்­பட்­ட­மையும் கார­ண­மாக பெரு­ம­ள­வான தமிழ், சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்கள் அச்சம் கார­ண­மாக நாட்டை விட்டு புலம் பெயர்ந்­தனர். இத்­த­கைய சம்­ப­வங்கள் நாட்டில் ஊடக சுதந்­தி­ரத்தை வெகு­வாகப் பாதித்­தது. அச்­சு­றுத்­தல்கள் கார­ண­மாக ஊட­க­வி­ய­லா­ளர்­களே தமக்கு சுய­த­ணிக்கை விதிக்கும் நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. தற்­போது இந்த நிலையில் சிறி­த­ளவு முன்­னேற்றம் காணப்­பட்ட போதிலும் சுய தணிக்கை என்­பது அமு­லி­லேயே இருந்து வரு­கின்­றது.
இந்த நிலையில் இலங்கை பத்­தி­ரிகை முறைப்­பாட்டு ஆணைக்­கு­ழுவின் 10 வருட பூர்த்­தியை முன்­னிட்டு ‘பத்­தி­ரி­கைத்­து­றையில் சுய கட்­டுப்­பாட்டு ஒழுக்­கக்­கோ­வையும் ஒழுக்க நெறி அடிப்­ப­டை­யி­லான அறிக்­கை­யி­டலும்’ எனும் தலைப்பில் சர்­வ­தேச ஊடக மாநாடு கொழும்பில் நடத்­தப்­பட்­டுள்­ளது. கடந்த 13 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு கொழும்­பி­லுள்ள லக்ஷ்மன் கதிர்­காமர் நிலை­யத்தில் இடம் பெற்­றது. இதனைத் தொடர்ந்து 14 ஆம், 15 ஆம் திக­தி­களில் இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாப­னத்தின் கேட்போர் கூடத்தில் இரண்டு நாள் மாநாடு இடம் பெற்றது.
இந்த மாநாட்டில் சர்­வ­தேச நாடு­களின் ஊட­கப்­பி­ர­மு­கர்கள், உள்­நாட்டு ஊட­க­வி­யலா­ளர்கள், சர்­வ­தேச ஊடக அமைப்­புக்­களின் தலைமை அதி­கா­ரிகள் உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­டனர். இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் சட்­டத்­துறைப் பேரா­சி­ரியர் சாவித்­திரி குண­சே­கர, யுனஸ்கோ நிறு­வ­னத்தின் தொடர்­பாடல் நிகழ்ச்­சித்­திட்ட விசேட நிபுணர் இஸ்க்ரா பனெவ்ஸ்கா, பிரித்­தா­னி­யாவின் சிரேஷ்ட பத்­தி­ரி­கை­யாளர் இயன் பில்ஸ் உட்­பட பலரும் கலந்து கொண்­டனர்.
இந்த நிகழ்வில் உரை­யாற்­றிய கொழும்பு பல்­கலைக்­க­ழ­கத்தின் சட்­டத்­துறை பேரா­சி­ரியர் சாவித்­திரி குண­சே­ கர பத்­தி­ரிகைத் துறையில் சுய கட்­டுப்­பாடு என்­பது ஊட­கத்­து­றையின் சமூ­கப்­பொ­றுப்பை எடுத்­துக்­காட்­டு­கின்­றது. அதா­வது ஊட­கங்கள் தமது அதி­கா­ரங்­களை துஷ்­பி­ர­யோ­கம் செய்­யக்­கூ­டாது என்­ப­தற்­காக இந்த நடை­முறை பல நாடு­களில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இந்தப் பிராந்­தி­யத்தில் தகவல் அறியும் சட்­ட­மூலம் இல்­லாத சில நாடு­களில் இலங்­கையும் ஒன்­றாகும் என்று தெரி­வித்­தி­ருந்தார்.
இந்த மாநாட்டில் தகவல் அறியும் உரிமை தொடர்­பான சட்­ட­மூ­லத்தை இலங்­கையில் நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து பேரா­ளர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். சுய­கட்­டுப்­பாட்டு ஒழுக்­க­வியல் பற்றி ஆராய்­கின்ற இந்த தரு­ணத்தில் அர­சாங்­கத்­தினால் ஊட­கங்கள் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தை­விட சுய கட்­டுப்­பாட்டை கடைப்­பி­டிப்­பதே சிறந்­தது என்று இம்­மா­நாட்டில் கலந்து கொண்ட பிரித்­தா­னி­யாவின் சிரேஷ்ட பத்­தி­ரி­கை­யாளர் இயன் பீல்ஸ் கருத்துத் தெரி­வித்­தி­ருந்தார். பிரித்­தா­னி­யாவில் இவ்­வா­றான சுய கட்­டுப்­பாடு கடந்த 300 வரு­டங்­க­ளாக பின்­பற்­றப்­பட்டு வரு­கின்­றது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.
எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் ஊடக சுதந்­திரம் என்­பது வித்­தி­யா­ச­மான முறை­யி­லேயே கையா­ளப்­ப­டு­கின்­றது. பிரித்­தா­னியா, அமெ­ரிக்கா உட்­பட மேற்­கு­ல­க­நா­டு­க­ளுடன் ஒப்­பிடும் அள­விற்கு இங்கு முழு­மை­யான ஊடக சுதந்­திர நடை­முறை இன்­னமும் உரு­வா­க­வில்லை. மேற்­கு­ல­க­நா­டு­களில் ஊட­கங்கள் ஒரு­வரை தனிப்­பட்ட முறையில் தாக்­கு­வதை தடுப்­ப­தற்­கா­கவே சுய கட்­டுப்­பா­டுகள் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. ஆனால் எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் நிலைமை வேறு­வி­த­மாக உள்­ளது. எனவே, இங்கு சுய கட்­டுப்­பாடு அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வது என்­பது வேறு விட­ய­மா­கவும் மேற்­கு­ல­க­நா­டு­களில் சுய கட்­டுப்­பாடு என்­பது மற்­றொரு விட­ய­மா­க­வுமே அமைந்­துள்­ளது.
கொழும்பில் நடை­பெற்ற பத்­தி­ரிகைப் பேர­வையின் சர்­வ­தேச மாநாட்டின் முடிவில் பல பரிந்­து­ரை­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. நாட்டின் ஊடக சுதந்­தி­ரத்தில் அர­சாங்கம் தலை­யி­டக்­கூ­டாது, ஊட­கங்கள் ஒழுக்­க­நெ­றிக்­கோ­வையை கடைப்­பி­டிப்­பது அவ­சி­ய­மாகும். தகவல் அறியும் சட்­ட­மூ­லத்தை இலங்­கையில் அமுல்­ப­டுத்த வேண்டும், அர­சாங்கம் ஒழுக்கக் கோவையை உரு­வாக்க இட­ம­ளிக்­கக்­கூ­டாது. செய்­தி­களில் உரி­மை­யா­ளர்கள் தலை­யி­டக்­கூ­டாது. மக்­க­ளுக்கு சரி­யான தக­வல்­கள் வழங்­கப்­ப­ட­வேண்டும். வடக்கு, கிழக்கின் ஊடக நட­வ­டிக்­கைகள் குறித்து அவ­தானம் செலுத்­தப்­ப­ட­வேண்டும் என்ற பரிந்­து­ரைகள் மாநாட்டின் முடிவில் முன்வைக்கப்­பட்­டுள்­ளன.
இந்தப் பரிந்­து­ரை­களில் முக்­கிய விட­யங்­க­ளாக நாட்டின் ஊடக சுதந்­தி­ரத்தில் அர­சாங்கம் தலை­யி­டக்­கூ­டாது என்­ப­துவும் இலங்­கையில் தகவல் அறியும் சட்­ட­மூ­லத்தை அமுல்­ப­டுத்த வேண்டும் என்­பதும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­வை­யாக அமை­கின்­றன.
நாட்டின் ஊடக சுதந்­தி­ரத்தில் அர­சாங்கம் நேர­டி­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ தலை­யி­டக்­கூ­டாது என்ற விட­ய­மா­னது ஊடக சுதந்­தி­ரத்தைப் பாது­காப்­ப­தற்கு அவ­சி­ய­மான விட­ய­மாகும். யுத்­த­கா­லத்தில் ஊடக சுதந்­தி­ரத்தில் அர­சாங்­கத்தின் தலை­யீ­டுகள் அதி­க­மாகவே காணப்­பட்­டன. அத்­துடன் ஊட­க­வி­ய­லா­ளர்கள் தொடர்ந்தும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டனர். இந்த நிலையில் சற்று முன்­னேற்றம் காணப்­ப­டு­கின்ற போதிலும், ஊட­கங்கள் தற்­போதும் சுய­த­ணிக்­கை­யி­னையே பின்­பற்றி வரு­கின்­றன. எனவே, இத்­த­கைய நிலை­யினை மாற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும்.
இதேபோல் தகவல் அறியும் உரிமை சட்­ட­மூ­லத்­தினை இலங்­கையில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு 2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரை­யி­லான ஐக்­கி­ய­தே­சிய முன்­ன­ணியின் ஆட்­சியில் தீவிர முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆனால் 2004 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து இம்­மு­யற்சி கைகூ­ட­வில்லை. 2010 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்தில் இதற்­கான சட்­ட­வ­ரைபு கொண்­டு­வ­ரப்­பட்­ட­போ­திலும் அந்த முயற்சி பய­ன­ளிக்­க­வில்லை. 2011 ஆம் ஆண்டு எதிர்க்­கட்சிப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கரு ஜய­சூ­ரி­ய­வினால் தகவல் அறியும் உரிமை தொடர்­பான சட்­ட­மூலம் தனி­நபர் பிரே­ர­ணை­யாக கொண்டுவரப்பட்டது. எனினும் அந்தப் பிரேரணை விவாதிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டது.
உலகில் 97 நாடுகளில் தகவல் அறியும் சட்டமூலம் நடைமுறையில் உள்ளது. எனவே இதன் அவசியம் கருதி இந்த சட்டமூலத்தை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டியது இன்றியமையாததாகும். இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் 10 வருட பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற சர்வதேச ஊடக மாநாடானது ஊடகவியலாளர்களின் செயற்பாட்டிற்கு உந்து சக்தியான விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளது. இந்த மாநாட்டின் இறுதியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளானது நாட்டின் ஊடக சுதந்திரத்தை கட்டிவளர்ப்பதற்கான படிக்கற்களாக அமைந்திருக்கின்றன.
எனவே, இந்தப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கமும் ஊடக நிறுவனங்களும் முன்வரவேண்டும். இதன் மூலமே எமது நாட்டில் சிறந்ததொரு ஊடகத்துறையை கட்டியெழுப்ப முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்
« PREV
NEXT »

No comments