Latest News

January 09, 2014

அமெ­ரிக்க விசேட பிரதிநிதி ஸ் ரீபன் ரெப்­புக்கு மசாலாதோசை விருந்தளித்த வடக்கு முதலமைச்சர்
by admin - 0

யாழுக்கு நேற்று விஜயம் செய்த போர்க்­குற்ற விசா­ர­ணை­க­ளுக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் ஸ் ரீபன் ரெப் நேற்று மாங்கோ விருந்­தினர் விடு­தியில் வட­மா­காண முத­ல­மைச்சர் தலை­மை­யி­லான குழு­வி­னரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். தூதுவர் ரெப்பின் விருப்­பத்­திற்­க­மைய அவ­ருக்கு மசாலா தோசை­யினை வழங்­கு­வ­தற்­காக குறித்த விடு­தி­யினை வடக்கின் முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வு­செய்­துள்ளார் என விட­ய­ம­றிந்­த­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.
இரவு 8 மணி­ய­ளவில் ஆரம்­ப­மா­கிய இந்த இரவு விருந்­து­ப­சார நிகழ்வு சுமார் 2 மணித்­தி­யா­லங்கள் நடை­பெற்­றது. இந்த விருந்­து­ப­சா­ரத்தின் வடக்கின் தற்­போ­தைய நிலை தொடர்­பாக இரு­த­ரப்­பி­னரும் சுவா­ர­சி­ய­மான கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட்­டனர்.
இச்­சந்­திப்­புக்குப் பின்னர் முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வ­ர­னிடம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் இச்­சந்­திப்புத் தொடர்­பாகக் கருத்துக் கேட்­ட­பொ­ழுது, இச்­சந்­திப்புத் தொடர்­பாக அமெ­ரிக்கத் தூதுவர் ஸ் ரீபன் ராப் ஊட­கங்­க­ளுக்குக் கருத்துத் தெரி­விக்­காமல் சென்­றுள்­ள­மை­யினால் தன்னால் இங்கு என்ன பேசப்­பட்­டது என்ற விட­யத்தை தெரி­விக்க முடி­யாது என முத­ல­மைச்சர் ஆணித்­த­ர­மாக ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்து கருத்துக் கூற மறுத்­து­விட்டார்.
இதே­வேளை, இச்­சந்­திப்பில் வட­ப­குதி மக்கள் தற்­பொ­ழுது எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்­பா­கவும் இம்­மக்களின் எதிர்­கால நட­வ­டிக்­கைகள் தொடர்­பா­கவும் இரு­த­ரப்­பி­னரும் பரஸ்­பரம் கலந்­து­ரை­யா­டி­ய­தாக தக­வல்கள் வெ ளியா­கி­யுள்­ளன.
முத­ல­மைச்சர் மற்றும் ஸ் ரீபன் ராப் ஆகி­யோரின் சந்­திப்புத் தொடர்­பாக முக்­கி­ய­மான விட­யங்கள் வெளி­வரும் என நீண்­ட­நே­ர­மாக மாங்கோ விருந்­தினர் விடு­தியில் காத்­தி­ருந்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் முத­ல­மைச்­சரின் இப்­ப­தி­லுக்குப் பின்னர் ஏமாற்­றத்­துடன் திரும்­பி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
இதே­வேளை முன்­ன­தாக நேற்றுப் பிற்­பகல் கிறின் கிறாஸ் விருந்­தினர் விடு­தியில் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­களைச் சந்­தித்த ஸ் ரீபன் ரெப், அவர்­க­ளிடம் வடக்கின் நிலை­மைகள் தொடர்­பாகக் கேட்டறிந்துள்ளார். இச் சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவில் வைத்தியர்கள், மதகுருமார் உள்ளிட்ட புத்திஜீவிகள் கலந்துகொண்டனர். பாது காப்புக் காரணங்களுக்காக இக்கு ழுவினர் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதுத ஆயுதம்
« PREV
NEXT »

No comments