Latest News

January 17, 2014

கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் வரட்சி நீர் நிலைகள் வற்றியதால் மக்கள் அச்சம்
by admin - 0

கடந்த வருடம் பரு­வ­மழை பொய்த்­ததால் கிளி­நொச்சி மாவட்­டத்­தி­லுள்ள சகல குளங்­களின் நீர்­மட்­டமும் குறை­வ­டைந்­துள்­ளது. இதனால் எதிர்­கா­லத்தில் இம் மாவட்­டத்தில் வரட்சி ஏற்­ப­டலாம் என மக்கள் அச்சம் வெளி­யிட்­டுள்­ளனர்.
கடந்த வருடம் இதே­கா­லப்­ப­கு­தியில் கிளி­நொச்­சியில் உள்ள பிர­தான குளங்கள் அனைத்தும் முழு­மை­யாக நிரம்பி இரண்டு தட­வைகள் வான் பாய்ந்­தது. குறிப்­பாக இர­ணை­மடுக் குளத்தின் அனைத்து வான் கத­வு­களும் முழு­மை­யாக திறக்­கப்­பட்ட நிலை­யிலும் வான் பாய்ந்­தது. இது 12 வரு­டங்­க­ளுக்கு பின்னர் இடம்­பெற்ற நிகழ்­வாகக் காணப்­பட்­டதால் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருந்­தது.

ஆனால், தற்­போது இர­ணை­மடுக் குளத்தின் நீர் மட்டம் 17 அடி 06 அங்­கு­ல­மாக காணப்­ப­டு­கி­றது. இந்த நிலைமை கிளி­நொச்சி மாவட்ட விவ­சா­யிகள் மட்­டு­மன்றி மக்கள் மத்­தி­யிலும் எதிர்­கா­லத்தின் விவ­சாயம் மற்றும் குடிநீர் குறித்த அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
கிளி­நொச்சி மாவட்­டத்தின் நிலத்­தடி நீரை பாது­காப்­பதில் கிளி­நொச்­சியில் உள்ள குளங்­களே கார­ண­மாக காணப்­ப­டு­கி­ன்றன.
15.01.2014 அன்­றைய கிளி­நொச்சி நீர்ப்­பா­சனத் திணைக்­க­ளத்தின் தக­வல்­களின் அடிப்­ப­டையில் அக்­க­ராயன் குளம் 09 அடி 10 அங்­குலம், இர­ணை­மடுக் குளம் 17 அடி 06 அங்­குலம், கல்­மடு குளம் 12 அடி 06 அங்­குலம், பிர­மந்­த­னாறு குளம் 04 அடி 08 அங்­குலம், புது­மு­றிப்பு குளம் 08 அடி 05அங்­குலம், கன­காம்­பி­கைக்­குளம் 06 அடி 01 அங்­குலம், கரி­யா­லை­நா­க­ப­டுவான் குளம் 03 அடி 05 அங்­குலம் ஆக நீர்­மட்டம் காணப்­பட்­டது.
ஆனால், கடந்த காலங்­களில் இக்­கா­லப்­ப­கு­தியில் குறித்த சகல குளங்­களும் முழு­மை­யாக நிரம்­பிய நிலை­யி­லேயே காணப்­பட்­டுள்­ளன.
இவ்­வ­ருடம் கால­நி­லையில் ஏற்­பட்ட மாற்றம் கார­ண­மாக பருவ மழையை நம்­பிய விவ­சாய நட­வ­டிக்­கைகள் உள்­ளிட்ட நெற்­செய்­கையும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு, இனி­வரும் நாட்­களில் மழை பெய்து குளங்­களின் நீர் மட்டம் உய­ரா­து­விடின் இந்த வருடம் சிறுபோக நெற்செய்கை பாதிக்கப்படுவதுடன், கிளி-நொச்சியில் நிலத்தடி நீரும் குறைவடையும் என இப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
« PREV
NEXT »

No comments