Latest News

January 05, 2014

இர­ணை­மடுக் குளப் புன­ர­மைப்பு, கிளி­நொச்சி மக்­க­ளுக்கே பெரும் வரப்­பி­ர­சா­த­மாகும் -வங்கி ஆலோ­சகர் குரூஸ்
by admin - 0

இர­ணை­மடு திட்­டத்­தினால் கிளி­நொச்சி விவ­சா­யிகள் பாதிக்­கப்­ப­டு­வ­தாக பர­வ­லான கருத்­துக்கள் எழு­கின்­றன. இது உண்­மையில் இத்­திட்டம் பற்றி அறி­யா­மை­யினால் ஏற்­படும் விளை­வே­யாகும். இத்­திட்­ட­மா­னது உண்­மையில் கிளி­நொச்சி விவ­சா­யி­க­ளுக்கு ஓர் வரப்­பி­ர­சா­த­மாகும். இத்­திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாமல் போனால் இன்னும் ஓரிரு தசாப்த காலத்­துக்குள் இர­ணை­மடுக்குளம் மோச­மான பாதிப்பை எதிர்­நோக்கும். இது கிளி­நொச்சி விவ­சா­யி­க­ளுக்கு பாரிய பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே அமையும். எனவே, தூர நோக்­குடன் இத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும் என யாழ்ப்­பாணம் மற்றும் கிளி­நொச்சி சுகா­தார திட்­டத்­துக்­கான ஆசிய அபி­வி­ருத்தி வங்கி ஆலோ­ச­கரும் முன்னாள் மன்னார் மாவட்ட அர­சாங்க அதி­ப­ரு­மான எஸ்.எம்.குரூஸ் தெரி­வித்தார்.
இர­ணை­மடு திட்டம் குறித்து வீர­கே­சரி வார வெளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,
கேள்வி: இர­ணை­மடுக் குளம் தற்­போது புன­ர­மைக்­கப்­பட வேண்­டிய அவ­சியம் என்ன?
பதில்: இர­ணை­மடுக்குளம், அதன் கட்­டுக்கள் மற்றும் நீர் வழங்கல் வாய்க்­கால்கள் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. கடந்த பல வரு­டங்­க­ளாக திருத்­தப்­ப­டா­ததால் அதன் நீர் கொள்­ள­ளவு மிகவும் குறை­வாக இருக்­கி­றது. இர­ணை­மடுக் குளத்தின் அணைக்­கட்டின் உயரம் 34 அடி­யாக இருந்த போதிலும் தற்­போது 28 – 30 அடி உயரம் வரையே நீரை சேமிக்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. 34 அடி உய­ர­மான அக்­கு­ளத்தின் கொள்­திறன் ஒரு இலட்­சத்து ஆறா­யி­ரத்து ஐந்­நூறு ஏக்கர் அடி­யாக இருந்­தாலும் நீர்ப்­பா­சனத் திணைக்­க­ளத்தின் அறிக்­கையின் படி வரு­டாந்தம் சாதா­ர­ண­மாக 82 ஆயிரம் ஏக்கர் கொள்­ள­ள­வையே கிளி­நொச்சிப் பிர­தேச மக்கள் பயன்­ப­டுத்­து­கி­றார்கள். எனவே அதன் முழு­மை­யான கொள்­ள­ள­வி­லி­ருந்து 24 ஆயிரம் ஏக்கர் தண்­ணீரைப் பயன்­ப­டுத்த முடி­யாத நிலையில் இருக்­கி­றார்கள். கிளி­நொச்சி விவ­சா­யிகள் ஒரு ஏக்கர் பயிர் செய்ய 9 ஏக்கர் அடி தண்­ணீரைப் பயன்­ப­டுத்­து­கி­றார்கள். எனவே, பயன்­ப­டுத்­தா­தி­ருக்கும் இந்த 24 ஆயிரம் அடி ஏக்கர் தண்­ணீ­ரையும் அவர்கள் முழு­மை­யாக பயிர்ச் செய்­கைக்­கென உப­யோ­கித்தால் தற்­போது இருப்­ப­தை­விட 26 ஆயிரம் ஏக்கர் மேல­தி­க­மாக பயிர் செய்ய முடியும். இது வரு­டாந்தம் வீணாகிப் போகின்­றது.
இர­ணை­மடுக் குளத்தின் கீழ்­வாய்க்­கால்கள் மிக மோச­மான நிலையில் காணப்­ப­டு­கின்­றன. இது புன­ர­மைக்­கப்­பட்டால் நீர் விர­ய­மா­வது தடுக்­கப்­பட்டு 1 ஏக்கர் அடி நீரில் 7 ஏக்கர் பயிர் செய்யக் கூடி­ய­தாக இருக்கும். அதே­வேளை விவ­சா­யிகள் மேலும் கவ­ன­மாக நீரைப் பாவித்தால் 1 ஏக்கர் பயிர்­செய்ய 5 ஏக்கர் அடி நீர் போது­மாக இருக்கும்.
இர­ணை­மடுக் குளத்தின் முழு­மை­யான 34 அடி­யிலும் நீரைத் தேக்­கு­வ­தற்கு அணைக்­கட்டு பலப்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யி­ருக்­கி­றன. அதேபோல் நீர் விர­ய­மா­வதைத் தடுப்­ப­தற்கு கீழ்­வாய்க்­கால்கள் செம்­மைப்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யுள்­ளன. அத்­தோடு மக்­களும் இத்­திட்­டத்­துடன் இணைந்து நீர் முகா­மைத்­து­வத்தை சரி­யாகக் கடைப்­பி­டித்தால் ஒரு சிறு­போ­கத்­திற்கு 16 ஆயிரம் ஏக்கர் பயிர் செய்ய 80 ஆயிரம் ஏக்கர் அடி நீர் போது­மா­ன­தாக இருக்கும்.
இத்­திட்­டத்தின் கீழேயே குளக்­கட்டு பலப் ­ப­டுத்­தப்­பட்டு 36 அடி வரை உயர்த்­ தப்­ப­ட­வுள்­ளது. இவ்­வாறு செய்யும் சந்­தர்ப்­பத்தில் இர­ணை­மடுக் குளத்தின் கொள்­திறன் ஒரு இலட்­சத்து ஆறா­யி­ரத்து 500 அடியில் இருந்து ஒரு இலட்­சத்து இரு­ப­தா­யிரம் அடி­யாக அதி­க­ரிக்கப்­படும். அதா­வது 13500 ஏக்கர் அடி கூடு­த­லாக பெறப்­பட இருக்­கி­றது. இவ்வாறு இந்தக் கட்டு உயர்த்­தப்­ப­டு­வதன் மூலம் கிளி­நொச்சி, பழை, பூந­கரி, யாழ்ப்­பாணம் உட்­பட பிர­தே­சங்­க­ளுக்கு மொத்தம் 12 ஆயிரம் ஏக்கர் அடி நீர் பெறப்­படும்.
ஒரு இலட்­சத்­துக்கு 20 ஆயிரம் ஏக்கர் அடி மொத்தக் கொள்­தி­றனில் 10 வீதம் மாத்­தி­ரமே யாழ்ப்­பா­ணத்­துக்கு குடி­நீ­ருக்­காக விநி­யோ­கிக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இந்த 12 ஆயிரம் ஏக்கர் அடி நீரைப் பெறு­வ­தற்கு 20 வருட காலம் செல்லும் என்­பது இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.
இந்த 12 ஆயிரம் ஏக்கர் அடி தண்ணீர் 90 ஆயிரம் வீடு­க­ளுக்கு வழங்­கப்­படும். முத­லா­வது வரு­டத்தில் 10 ஆயிரம் வீடு­க­ளுக்கு வழங்­கப்­படும். இரண்­டா­வது வரு­டத்தில் 18 ஆயிரம் வீடு­க­ளுக்கு வழங்­கப்­படும். மேலும் வரு­டாந்தம் 4 ஆயிரம் வீடுகள் வீதம் அதி­க­ரிக்­கப்­பட்டு 20 வரு­டத்தில் அதா­வது 2036 ஆம் ஆண்டு 90 ஆயிரம் வீடு­க­ளுக்கு வழங்­கப்­படும். ஆகவே இந்த 12 ஆயிரம் அடி ஏக்கர் தண்ணீர் முழு­மை­யாக வழங்­கப்­பட 20 வருட காலம் செல்லும். இது விவ­சா­யி­க­ளுக்கு கூடு­த­லான நன்­மை­ய­ளிக்கும் என்­பதில் எவ்­வித ஐய­மு­மில்லை.
இத்­திட்­டத்­தோடு இணைந்த இவாட் (IFAD Down System) திட்­டத்தின் மூலம் 29 மில்­லியன் நிதி ஒதுக்­கப்­பட்டு கீழ்­வாய்க்­கால்கள் திருத்­தப்­பட்டு வரு­கின்­றன. இக்­கீழ்­வாய்க்­கால்கள் அனைத்தும் திருத்­தப்­பட்டால் நீர் வச­திகள் அதி­க­ரிக்­கப்­பட்டு மக்கள் கூடு­த­லான நிலத்தில் விவ­சாயம் செய்யக் கூடி­ய­தாக இருக் கும்.
இந்தத் திட்­டத்தின் கீழ் புன­ர­மைக்­கப்­படும் இர­ணை­மடுக் குளக்­கட்டு 100 வரு­டத்­துக்கு பாது­காப்­பாக இருக்கும் என உத்­த­ர­வா­த­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் கலிங்குப் புன­ர­மைப்பும் (Head System) செய்­யப்­படும். அத்­தோடு 185 மீற்றர் நீள­மான புதிய பாலம் அமைக்­கப்­படும். அது திரு­வை­யாறு, இரா­ம­நா­த­புரம் ஆகிய பகு­தி­களை இணைக்கக் கூடி­ய­தாக இருக்கும். மற்றும் திரு­வை­யாறு ஏற்று நிர்ப்­பா­சனத் திட்டம் உரு­வாக்­கப்­படும்.
இர­ணை­மடுத் திட்டம் யாழ்ப்­பா­ணத்­துக்கு நீர் வழங்கும் திட்டம் மாத்­திரம் அல்ல. இதனால் யாழ்.மக்­க­ளுக்கு குடி­நீ­ருக்­காக 10 சத­வீதம் மாத்­தி­ரமே எடுக்­கப்­ப­டு­கி­றது. ஆனால் இது இர­ணை­மடுக்குளத்தை மீளக் கட்­டி­யெ­ழுப்பும் பாரி­ய­தொரு திட்டம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
கேள்வி: ஆரம்­ப­கா­லத்தில் வட பகு­தியில் இத்­திட்­டத்­திற்கு ஆத­ரவு இருந்­த­போதும் தற்­போது முட்டுக் கட்­டைகள் ஏற்­ப­டு­கின்­றன. இதற்­கான கார­ணங்கள் யாவை?
பதில்: இத்­திட்­டத்­துக்­கான முதற்­பேச்­சு­வார்த்தை 2002 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது. யாழ்.மக்­க­ளுக்கு குடி
நீர் தேவை­யி­ருப்­ப­தால் இர­ணை­மடுக் குளம் புன­ர­மைக்­கப்­பட ௨௦௦௬ ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்­கி­யிடம் நிதி உதவி கோரப்­பட்­டது. இதற்கு சம்­ம­தித்த ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யா­னது சம்­பந்­தப்­பட்ட திணைக்­க­ளங்கள் மற்றும் விவ­சா­யி­க­ளி­ட­மி­ருந்து அவர்­களின் முழுச் சம்­ம­தத்­தோடு தான் இத் திட்­டத்­திற்கு உதவி வழங்க முன் வந்­தது. இதற்­கி­ணங்க 2007 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு சபை­யி­னரும், அப்­போ­தைய விவ­சாய நீர்ப்­பா­சன அமைச்சும், கிளி­நொச்சி மாவட்ட கமக்­கார அமைப்­புக்­களின் சம்­மே­ளனத் தலைவர் ஆகி­யோ­ருடன் இத்­திட்­டத்­திற்­கு­ரிய உடன்­ப­டிக்கை செய்­யப்­பட்­டது. இதற்கு முன்னர் ஏறக்­குறைய 60 க்கு மேற்­பட்ட கூட்­டங்கள் இவ்­வி­வ­சா­யி­க­ளுக்கு நடத்­தப்­பட்­ட­தாக தெரிய வரு­கி­றது.
கேள்வி: ஆசிய அபி­வி­ருத்தி வங்கி மூலம் இத்­திட்­டத்­திற்­காக எவ்­வ­ளவு பணம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது? மற்றும் இத்­திட்டம் பற்றி விரி­வாகக் கூற­மு­டி­யுமா?
பதில்: ஆசிய அபி­வி­ருத்தி வங்கி இந்த உடன்­ப­டிக்­கையை நம்­பிக்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே செய்­தது. எனவே அந்த நம்­பிக்கை பேணப்­பட வேண்டும்.
இத்­திட்டம் மூன்று பிரி­வு­க­ளாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.
1. கட்­டு­மான வேலை
2. யாழ்.நீர் வள முகா­மைத்­துவம்
3. வலு­வூட்டல்
இதில் கட்­டு­மான வேலை­க­ளுக்கே பாரிய அளவில் பணம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.
அது மேலும் மூன்று பிரி­வு­க­ளாக பிரிக்­கப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.
1. இர­ணை­மடு குளக் கட்­டு­மான வேலைகள் மற்றும் மேற்­கூ­றப்­பட்ட அனைத்து வேலை­க­ளையும் செய்தல்.
2. இர­ணை­மடு குளத்­தி­லி­ருந்து பழை வரை தண்ணீர் கொண்டு செல்ல குழாய் பொருத்­துதல் .
பழையில் நீர் சுத்­தி­க­ரிப்பு நிலையம் அமைத்தல். பின்னர் பழை­யி­லி­ருந்து யாழ். நிலப்­ப­குதி மற்றும் பூந­கரி பகு­திக்கு நீர் கொண்டு செல்­லுதல். மேலும் அப்­ப­கு­தி­களில் நீர்த் தாங்­கிகள் அமைத்தல்
3. யாழ். மநா­ந­கர சபையில் ஏறக்­கு­றைய 20 ஆயிரம் மல­சல கூடங்­களை அமைத்து கழி­வ­கற்றும் திட்­டத்தை நடை­மு­றைக்குக் கொண்டு வருதல்.
இவற்­றுக்­கான மொத்த செலவு 164.04 மில்­லியன் டொல­ராகும். அதா­வது 21325 ஆயிரம் மில்­லியன் ரூபா­வாகும்.
இர­ணை­மடு குளக் கீழ்­வாய்க்கால் திட்­டத்தின் (இவாட்) கீழ் 29.32 மில்­லியன் டொலர் செல­வி­டப்­ப­ட­வுள்­ளது. அதா­வது 3800 மில்­லியன் ரூபா­வாகும். எனவே மொத்த செலவு அண்­ண­ள­வாக 25 ஆயிரம் மில்­லியன் ரூபா­வாகும்.
வட மாகா­ணத்­துக்கு 2013 ஆம் ஆண்­டுக்­கான மொத்த செலவு 17 ஆயிரம் மில்­லியன் ரூபா­வாகும். இதில் 1500 மில்­லியன் ரூபா இத்­திட்­டத்­திற்கு வழங்­கப்­பட்ட பண­மாகும். எனவே இது கணி­ச­மான தொகை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
கேள்வி: இத்­திட்­டத்­தினால் கிளி­நொச்சி விவ­சா­யி­க­ளுக்கு பாதிப்­புக்கள் இருப்­ப­தாக சொல்­லப்­ப­டு­கி­றதோ?
பதில்: அவர்­க­ளுக்கு பாதிப்பு என்று எதுவும் இல்லை. சொல்­லப்­போனால் நன்­மைகள் தான் அதிகம். கிளி­நொச்சி விவ­சா­யிகள் இத்­திட்டம் குறித்து கேட்ட கோரிக்கை வரட்சிக் காலத்தில் தங்­க­ளது நிலைப்­பாடு என்ன? என்­ப­துதான். எனவே, இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் தங்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு தரக் கோரு­கி­றார்கள். அவர்­க­ளது கோரிக்கை நியா­ய­மா­னது. எனவே நாங்கள் இதற்­கான மாற்­று­வ­ழியைச் செய்ய இருக்­கிறோம்.
முத­லா­வது 10 ஆயிரம் அடியை விட நீர் மட்டம் குறை­வாக இருக்­கையில் யாழ். குடா­நாட்­டுக்­கான குடிநீர் விநி­யோ­கிக்­கப்­ப­ட­மாட்­டாது.
அல்­லது 24 மணி­நேர நீர் விநி­யோகம் தேவைக்­கேற்றாற் போல் குறைக்­கப்­படும். விவ­சா­யி­களின் சிறு­போகம் பாதிக்­கப்­ப­டு­மாக இருந்தால் அதற்­கான சிறு­போக நிவா­ரண பாது­காப்பு நிதியம் ஒன்றை ஏற்­ப­டுத்தி நஷ்­ட­ஈடு வழங்க நீர்­வ­ழங்கல் வடிகால் அமைப்பின் பொறுப்­ப­தி­காரி சம்­மதம் தெரி­வித்­துள்ளார்.
அதேபோல் இர­ணை­மடுக் குளத்­துக்கு அணித்­தாக உள்ள வன்­னேரி குளம், குட­மு­றட்டி ஆறு போன்ற பகு­தி­களில் நீர்த் தேக்­கங்கள் அமைக்­கப்­பட்டு வரட்சி நிலவும் அந்தக் குறிப்­பிட்ட காலத்­துக்கு ஒரு ஆத­ரவு வழங்­கப்­படும்.
மக்­க­ளுக்கு குடிநீர் வழங்க மாற்று முயற்­சி­களை மேற்­கொள்ள வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்­துக்கு இருக்­கி­றது. அதேபோல் யாழ். விவ­சா­யி­க­ளுக்கு தண்­ணீரை அள­வாகப் பாவிக்க வேண்­டிய பொறுப்பும் இருக்­கி­றது.
கேள்வி: யாழ்ப்­பா­ணத்­துக்கு ஏன் நீர் தேவை இருக்­கி­றது?
பதில்: ஆம், நிச்­ச­ய­மாக நீர்த் தேவை­யி­ருக்­கி­றது. யாழ்ப்­பா­ணத்தின் புவி­யி யல் அமைப்பு இலங்­கை­யி­லேயே தனித்­து­வ­மா­னது. யாழில் ஆறுகள் இல்லை. பாரிய குளங்கள் இல்லை. தரைக்கீழ் நீரை நம்­பியே மக்­களின் விவ­சா­யமும் குடிநீர்த் தேவை­களும் இருக்­கின்­றன. யாழ். குடா­நாடு மயோசின் பாறை உடன் கூடிய சுண்ணப் பாறை­க­ளினால் அமைந்­தி­ருப்­பதால் தரைக்கீழ் நீரோட்­டங்கள் மாச­டையும் சாத்­தியம் இருக்­கி­றது.
கடந்த காலங்களில் தரை கீழ் நீரை சுத்­த­மாக வைத்­தி­ருந்த மக்கள் தற்­போது நிலக்கீழ் நீரை நீர்ப்­பம்பி மூலம் எடுப்­ப­தாலும் யூரியா போன்ற பச­ளை­களின் அதி­க­பட்ச பாவ­னை­யாலும் நிலக்கீழ் நீரை மாசு­ப­டுத்­திவிட்டனர்.
ஆய்வின் படி யாழ். நிலக்கீழ் நீரில் ஒரு லீட்­ட­ருக்கு 149 மில்­லி­கிராம் நைட்ரேட் உள்­ளது. உலக சுகா­தார ஸ்தாபன நிய­மத்தின் படி ஒரு லீட்­ட­ருக்கு 45 மில்­லி­கிராம் நைட்ரேட்டே இருக்க வேண்டும். இது ஒரு இர­சா­யன ரீதி­யான பாதிப்கை நீருக்கு வழங்­கு­கின்­றது.
அது மாத்­தி­ர­மன்றி யாழ்.மாந­க­ர­சபை மல­சல கூடங்கள் நெருக்­க­மாக உள்­ளன. இது சுகா­தார முறை­படி அமைக்­கப்­ப­டாத மல­சல கூடங்­க­ளாக இருப்­பதால் பக்­டீ­ரியா தொற்று நிலக்கீழ் நீரிலே நிறைந்து காணப்­ப­டு­கின்­றது. அதா­வது உலக சுகா­தார ஸ்தாபன நிய­மத்­தை­விட பெரு­ம­ளவு கிரு­மித்­தொற்று இந்­நீரில் உள்­ளது.
ஒரு கட்­டத்தில் யாழ்.கச்­சே­ரியில் நடந்த கூட்­டத்தில் பிர­தேச சுகா­தார அதி­காரி குறிப்­பி­டு­கையில், இலங்­கையில் வரும் நெருப்­புக்­காய்ச்­சலில் 30 சதவீதம் யாழ்ப்­பாண மாவட்­டத்தில் ஏற்­ப­டு­வ­தாக கூறி­யி­ருந்தார்.
இது குறித்து சுருங்கக் கூறினால் யாழ்.மக்கள் மிகவும் அசுத்­த­ம­டைந்த நீரையே குடித்து வரு­கி­றார்கள். விடயம் அறிந்­த­வர்கள் போத்தல் தண்­ணீரை அருந்­து­கி­றார்கள்.
மேலும் இத்­திட்டம் குறித்து கிளி­நொச்சி விவ­சா­யி­களின் கோரிக்­கை­களில் இந்த நீர் குடி­நீ­ருக்கு மாத்­தி­ரமே பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும். நீர் சார்ந்த தொழிற்­சா­லை­க­ளுக்கு வழங்கக் கூடாது எனவும் கேட்­டி­ருந்­தனர்.
கேள்வி: ஏன் மாச­டைந்த இந் நீர் பற்றி மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­த­வில் ­லையா?
பதில்: இல்லை என்­றுதான் கூற வேண்டும். உண்­மையில் சாதா­ரண மக்­க­ளிடம் இதற்­கான விழிப்­பு­ணர்வு குறை­வாக இருக்­கி­றது. இது குறித்து அவர்கள் அறிந்தால் இந்­நீரை அவர்கள் குடிக்­கவே மாட்­டார்கள் என்­பதே உண்­மை­யான நிலைப்­பாடு.
கேள்வி: இத்­திட்­டத்தில் நீர் மற்றும் விவ­சாயம் சார்ந்த விட­யங்­க­ளுக்கு அப்பால் ஏதா­வது தொழில்­வாய்ப்பு தொடர்­பான நன்­மை­ககள் இருக்­கி­றதா?
பதில்: நிச்­ச­ய­மாக இருக்­கி­றது. 25 மில்­லியன் ரூபா செலவில் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள இத்­திட்ட காலத்­தி­லேயே திட்டம் பெரு­ம­ளவு வேலை­வாய்ப்­புக்கள் அப்­பி­ர­தேச மக்­க­ளுக்குக் கிடைக்கும். இதன் முதற் கட்­ட­மாக தம்­புள்­ளையில் இருக்கும் சந்தைத் தொகுதி போன்ற ஒரு சந்தைத் தொகுதி கிளி­நொச்­சியில் அமைக்க நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.
இதன் மூலம் நெல் அல்­லாத ஏனைய உணவுப் பொருட்­க­ளுக்­கு­ரிய சந்தை வாய்ப்பு அதி­க­ரிக்கும் போது மக்கள் ஏனைய உப உணவுப் பயிர்ச் செய்­கை­களை பெரு­ம­ளவு செய்ய ஆரம்­பிப்­பார்கள்.
இந்த அணைக்­கட்டு 36 அடிக்கு உயர்த்­தப்­ப­டு­வதன் மூல­மாக விவ­சாய செய்­கையின் அளவு தற்­போ­தைய அள­வை­விட அதி­க­ரிக்கும். எனவே மக் கள் பெரு­ம­ளவு வரு­மா­னத்தைப் பெற் றுக் கொள்­வார்கள். அது மாத்­தி­ர­மல்­லாது மக்­க­ளுக்கு குறிப்­பாக கிளி­நொச்சி விவ­சா­யி­க­ளுக்கு தொழில் துறை­களை ஆரம்­பிப்­ப­தற்கு உரிய வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­படும். இத்­திட்டம் அப்­பி­ர­தேச மக்­க­ளுக்கு பாரிய வரப்பிர­சா­த­மாக அமையும் என்­பதில் எவ்­வித சந்­தே­க­மு­மில்லை. அத்­தோடு சுத்தமான குடி­நீரை வழங்­கு­வதன் மூலம் யாழ். மற்றும் கிளி­நொச்சி மக்கள் ஆரோக்­கி­ய­மான வாழ்வை வாழ்­வார்கள்.
கேள்வி: தற்­ச­மயம் இத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தாது போனால் ஏற்­படும் பாதிப்­புக்கள் என்ன?
பதில்: ஒரு திட்டம் கருப் பெற்று உரு­வாகி செயல் முறைப்­ப­டுத்­து­வற்கு நீண்ட காலம் தேவைப்­படும். உதா­ர­ண­மாக இத்­திட்டம் 2002 இல் கருப் பெற்­றது. இப்­போது பத்து வரு­டங்­க­ளுக்கு மேலா­கி­வி­ட­டது. திட்டம் முன்­மொ­ழிவு தயா­ரித்தல், தேசிய திட்­ட­மி­டுதல், திணைக்­க­ளத்­தாரின் அங்­கீ­காரம் பெறுதல், வெளி­நாட்டு வள திணைக்­க­ளத்தின் (ERD) மூல­மாக அந்­நிய நிதி உத­வி­களைப் பெறுதல், திட்ட ஆய்வு நடத்­துதல், உதவி நிறு­வன அங்­கீ­காரம் பெறுதல், ஒப்­பந்தம் தயா­ரித்தல், திட்ட அமு­லாக்கம் செய்தல் என்று நீண்ட செயல்­முறை ஊடா­கவே பெரிய திட்­டங்கள் அமைக்­கப்­படும். எனவே இம்­மு­யற்­சிகள் வீணா­வது உண்­மையில் சிறந்த ஒன்­றல்ல.
அது­மாத்­தி­ர­மன்றி இர­ணை­மடுக் குள­மா­னது மாகாண சபை நிர்­வா­கத்­துக்கு உட்­பட்­ட­தாக இருக்­கி­றது. சாதா­ர­ண­மாக வெளி­நாட்டு வளங்­களை மத்­திய அர­சாங்­கத்­தி­னூ­டா­கத்தான் மாகாண சபை­க­ளுக்குப் பெற முடியும். ஆகையால் இத்­திட்டம் வட மாகா­ணத்­துக்கு மிகப் பெரும் வரப்­பி­ர­சா­த­மான ஒன்று என்று தான் கூற வேண்டும்.
பிற்காலத்தில் இர­ணை­மடுக் குளத்தின் புன­ர­மைப்­புக்­கான நிதி தேவைக்கோ அல்­லது இன்­னொரு யாழ்ப்­பாண குடிநீர் திட்­டத்­துக்கோ அல்­லது யாழ்ப்­பாண மல­கூட கழி­வ­கற்றும் ஏற்­பாட்­டுக்கோ புதிய திட்டம் ஒன்று அமைப்­ப­தானால் மிக நீண்ட காலம் எடுக்கும். இக்­கா­லப்­ப­கு­திக்குள் இரணைமடுக் குளத்தின் மற்றும் அணைக்கட்டுகளின் நிலை மேலும் மோசமடைந்துவிடும்.
இரண்டாவது பெரிய பாதிப்பு என்ன வெனில் தற்போது இவாட் (IFAD) திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக் கீழ் வாய்க்கால் திருத்தங்களானது இர ணைமடுத் திட்டத்துடன் தொடர்புடை யதாகும்.
எனவே, இரணைமடுக் குளத் திட் டம் அமுல்படுத்தப்படாது போனால் இவாட் (IFAD) திட்டமும் கேள்விக்குறி யாகிவிடும் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.
மூன்றாவது பாதிப்பு, மாகாண சபை யானது இதை நிறுத்திவிட்டு இனிமேல் வேறு உதவிகளை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற முடியாது. அத் தோடு மாகாண சபையானது 2011 ஆம் ஆண்டு பெப்ரவரியில் இவ்விர ணைமடு திட்டத்தை உரிய காலத் தில் அமுல்படுத்தி முடிப்பதாக உடன் படிக்கை செய்துள்ளது. எனவே இத் திட்டத்தை மாகாண சபை அமுல்படுத் தாது போனால் இது நிதி வழங்கும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை இழக்க வேண்டி ஏற்படும்.
கேள்வி: இத்திட்டத்துக்கான ஆசிய அபிவி ருத்தி வங்கி ஆலோசகர் என்ற வகையில் உங்களது ஆலோசனை என்ன?
பதில்: வட மாகாண சபை மீதான நம்பகத்தன்மை மிக முக்கியமானது. அதேநேரம் கொடையாளி நிறுவனங்கள் உதவுவதற்கு ஆதரவாக இருக்கும் இவ் வேளையில் ஆரம்பத்திலேயே முட் டுக் கட்டைகள் போட்டு நம்பகத்த தன்மையை இழந்துவிடுவது மிகவும் ஆபத்தானது.
அதேவேளை, மக்களினதும் விவசா யிகளினதும் தேவைகள் அநேகம் இருக் கின்றன. ஆனால், இவற்றை உடன டியாக நிறைவேற்ற முடியாது. எனவே படிப்படியாகத்தான் தீர்க்க வேண்டும்.
அவற்றிற்குரிய திட்டங்கள் முத லில் தாயாரிக்கப்பட வேண்டும். இதே வேளையில் இப்பெரும் திட்டத்தை தாமதமாக்காது விரைவில் நடை முறைப்படுத்தி அந்நிதி நிறுவனங்களின் நம்பகத் தன்மையைக் காப்பாற்றிக் கொண்டு மேலும் புதிய திட்டங்களை அமுல்படுத்த வழிசமைப்பதே அறிவு சார் நடவடிக்கையாகும்.
« PREV
NEXT »

No comments