Latest News

January 02, 2014

கோமாரி பிர­தே­ச களப்பு பகு­தியில் மீன்கள் உள்­ளிட்ட நீர்­வா­ழ் உயி­ரி­னங்கள் இறப்­பு நன்னீர் மீன­வர்­களின் தொழில் பாதிப்­­பு
by admin - 0

கோமாரி பிர­தேசக் களப்புப் பகு­தியில் மீன்கள் உள்­ளிட்ட நீர்வாழ் உயி­ரி­னங்கள் திடீ­ரென இறந்து வரு­வதால், இந்தக் கள ப்பில் மீன்­பி­டியில் ஈடு­படும் நன்னீர் மீன­வ ர்­களின் தொழில் நட­வ­டிக்­கைகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.
கோமாரிக் களப்பில் சுமார் 200 மீன­வர்கள் நன்நீர் மீன்­பிடித் தொழிலில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்­க­ளாக, இந்தக் களப்­பி­லுள்ள மீன்கள் உட்­பட தவளை, பாம்பு போன்ற உயி­ரி­னங்கள் திடீ­ரென இறந்து வரு­கின்­றன.
இதன் கார­ண­மாக, கோமாரிக் களப்பின் கரை முழு­வதும் இறந்த மீன்­களும், நீர்வாழ் உயி­ரி­னங்­களும் கரை­யொ­துங்கிக் காணப்­ப­டு­கின்­றன.
மேலும், விலாங்கு போன்ற பெரிய மீன்­வ­கை­களும் இறந்து காணப்­ப­டு­கின்­றன.
இதனால், இறந்த மீன்­களை உண்­ப­தற்­காக கோமாரிக் களப்­பினை நோக்கி பல்­லா­யிரக் கணக்­கான பற­வை­யி­னங்கள் படை­யெ­டுத்து வரு­வ­தையும் காணக்­கி­டைக்­கின்­றது.
இந்த நிலைமை கார­ண­மாக, கோமாரி பிர­தே­சத்­தி­லுள்ள மீன­வர்­களின் தொழில் நட­வ­டிக்­கைகள் கடந்த சில நாட்­க­ளாகப் பாதிக்­க ப்­பட்­டுள்­ளன.
இந்தக் களப்பில் மீன்­பி­டியில் ஈடு­படும் மீனவர் ஒருவர் நாளொன்­றுக்கு ஆயிரம் ரூபா முதல் 1500 ரூபா வரை உழைத்து வரு­வ­தாக இங்­குள்ள மீன­வர்கள் தெரி­வித்­தனர்.
கோமாரிப் பிர­தே­சத்தில் அதி­க­ள­வா­ன­வர்கள் மீன்­பி­டியை தமது ஜீவ­னோ­பாயத் தொழி­லாகக் கொண்­ட­வர்­க­ளாவர்.
இவ்­வாறு மீன்கள் உள்­ளிட்ட நீர்வாழ் உயி­ரி­னங்கள் இறந்து வரு­வ­தற்கு என்ன காரணம் என்று இன்னும் அறி­யப்­ப­ட­வில்லை.
கோமாரிக் களப்பில் இவ்­வாறு நீர்வாழ் உயி­ரி­னங்கள் பெரு­ம­ள­வாக இறந்து வரு­வது இதுவே முதல் தடவை என்றும், தனது வாழ்­நாளில் இந்தக் களப்பில் இவ்­வாறு உயி­ரி­னங்கள் இறப்­பதை இதற்கு முன்னர் தான் கண்­டி­ருக்­க­வில்லை எனவும், மூத்த மீனவத் தொழி­லா­ளி­யொ­ருவர் தெரி­வித்தார்.
கோமாரி களப்பில் உயி­ரி­னங்கள் இறந்து வரு­கின்­றமை குறித்து, பொத்­துவில் பிர­தே­சத்­துக்­கான கடற்­றொழில் பரி­சோ­தகர் எம்.ரி.எம். ஜௌபர் கருத்துத் தெரி­விக்­கையில் இவ்­வாறு உயி­ரி­னங்கள் இறப்­ப­தற்கு நீரில் ஏற்­பட்­டுள்ள சடு­தி­யான மாற்றம் கார­ண­மாக இருக்­கலாம் என நம்­பு­கிறோம்.
எனவே, உட­ன­டி­யாக முகத்­து­வா­ரத்­தினை வெட்டி களப்­பி­லுள்ள நீரினை கட­லுக்குள் கொண்டு சேர்க்கும் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளோம்.

« PREV
NEXT »

No comments