Latest News

January 12, 2014

காணி அப­க­ரிப்பு தொடர்பில் சர்­வ­தேச மாநாடு ஒன்றை நடாத்த பிரித்­தா­னிய தமிழர் பேரவை முயற்சி
by admin - 0

போர் இடம்பெற்ற போது போர் நிறுத்தம் செய்­யு­மாறு இந்­தியா எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் கோர­வில்லை என இலங்கை அரசு ஏற்­க­னவே தெரி­வித்து விட்­டது. போர் நிறுத்தக் கோரிக்­கையை அச்­ச­மயம் விடு­த­லைப்­பு­லிகள் சர்­வ­தே­சத்­திடம் கோரி இருந்­தனர். உண்மை நிலை அவ்­வா­றி­ருக்க இந்­தியா முன்­வைத்த போர்­நி­றுத்தக் கோரிக்­கையை இரு தரப் பும் ஏற்­க­வில்­லை­யென இப்­போது அமை ச்சர் சிதம்­பரம் கூறு­வது ஏற்­பு­டை­ய­தல்ல என இந்­திய ஊட­கங்­களே குறிப்­பிட்­டுள்­ளன.

தோண்­டத்­தோண்ட மனிதப் புதை­


கு­ழிக்குள் இருந்து வரும் மனித எலும்­புக் ­கூ­டுகள், மனித மண்டை ஓடுகள், தமி­ழர்­க­ளு­டை­யதா? ஒரு­வேளை காணாமல் போனோரின் எலும்­புக்­கூ­டு­க­ளாக இருக்­குமோ? போன்ற கேள்­விகள் தொடர்­கின்­றன. ஆனால் பதில் தாம­த­ம­டை­கின்­றது. யார் இந்த மனித எச்­சங்­களை பரி­சோ­திப்­பது? அவற்றின் உண்மைத் தன்­மையை எங்ஙனம் அறிந்து கொள்­வது?
மன்னார் மாந்தைச் சந்தி பிர­தான பாதையில் இவை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. திருக்­கே­தீஸ்­வரம் செல்லும் ஏ31 பாதையின் ஒரு பகுதி.
தொகுதி தொகு­தி­யாக 33க்கும் மேற்­பட்ட மனித எச்­சங்கள் சர்­வ­தே­சத்தின் கவ­னத்­தையும் கவர்ந்­துள்­ளன. அவை யாரு­டை­யவை? போரில் கொல்­லப்­பட்ட தமி­ழர்­க­ளு­டை­யதா என்ற கேள்­விகள் சர்­ வ­தேசம் முழு­வதும் ஒலிக்க ஆரம்­பித்­துள் ­ளன.
சனல் 4 தொலைக்­காட்சி வெளி­யிட்ட காணொளிப் பிரி­வுக்கு மற்­றொரு சாட்­சியம் கிடைத்­துள்­ள­தாகத் தெரி­வித்­துள்­ளது. போரின் போது கைதான தமிழ் இளை­ஞர்­களின் பின் தலையில் சுடு­வதை அந்தக் காணொ­ளிகள் காட்­டு­கின்­றன என அது குறிப்­பிட்­டது.
கண்டு பிடிக்­கப்­பட்­டுள்ள மண்டை ஓடுகள் சில­வற்றில் பின் மண்­டை­களில் துளைகள் இருப்­பதை நேரில் பார்த்த சாட்­சி­யங்கள் குறிப்­பிட்­டுள்­ளன. எனவே தமது காணொளிப் பதி­வுக்கு சாட்­சி­யங் கள் அவை என சனல் 4 தொலைக்­காட்சி சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.
மாந்­தையில் கண்டு பிடிக்­கப்­பட்ட மனித புதை­குழி தொடர்­பாக சர்­வ­தேச விசா­ரணை தேவை என்ற குரலும் எழுந்­துள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, மன்னார் ஆயர் அதி.வண.இரா­யப்பு ஜோசப் அடி­களார் மற்றும் நவ­ச­ம­ச­மாஜக் கட்­சியின் தலைவர் கலா­நிதி விக்­ர­ம­பாகு கரு­ணா­ரட்ன ஆகியோர் இந்த வேண்­டு­கோளை விடுத்­துள்­ளனர்.
அதே­நே­ரத்தில் அமெ­ரிக்க போர்க்­குற்ற விசா­ரணை நிபுணர் ஸ்டீவன் ஜே.ரெப் இலங்கை வந்­துள்ளார். அவர் இலங்­கை யில் பல அர­சியல் பிர­மு­கர்­களைச் சந்­ தித்து வரு­கிறார். அவ­ரிடம் தமிழ்த் தேசி யக் கூட்­ட­மைப்­பினர் மாந்தை புதை­கு­ழி கள் தொடர்­பான விப­ரங்­களை தெரி­வித்­துள்­ளனர்.
அவரின் விசா­ர­ணைக்கு இவ்­வி­வ­கா­ர மும் முக்­கிய தட­ய­மாகச் சேர்க்­கப்­ப­ட லாம் என்றும் ஆய்­வா­ளர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.
அமெ­ரிக்க நிபு­ணரின் வரவு என்­பது அமெ­ரிக்­காவின் மற்­றொரு தீர்­மா­னத்தின் வரைவு என்றே சர்­வ­தேச ஊட­கங்கள் குறிப்­பி­டு­கின்­றன. மார்ச் மாதம் நடை
பெ­ற­வுள்ள ஐ.நா.மனித உரிமைப் பேர வை மாநாட்டின் போது அமெ­ரிக்கா காட்­ட­மான தீர்­மா­ன­மொன்றை கொண்டு வர இருப்­ப­தாக எதிர்வு கூறப்­ப­டு­கின்­றது.
எனவே, அதற்கு முன்­ன­தாக பேர­வை யில் நிறை­வேற்­றப்­பட்ட இரண்டு தீர்­மா­னங்­களின் நிலை என்ன? இலங்கை அரசு அவற்றை கடைப்­பி­டித்­ததா? போருக்குப் பின் தமி­ழர்­களின் வாழ்­வா­தா­ரத்தில் முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ள­னவா?
இதுபோன்ற கேள்­வி­க­ளுக்கு அவர் விடை கண்டுபிடிக்க முயற்­சித்து வரு­கி றார். மன்னார் மாந்தை எலும்­புக்­கூ­டுகள் கண்டு பிடிப்பு அவரின் விசா­ர­ணைக்கு உதவிபுரி­யலாம் என்றும் குறிப்­பி­டப்­ப­டு ­கின்­றது.
ஏ–31 பாதை சில மாதங்­க­ளுக்கு முன்பு அக­லப்­ப­டுத்­தப்­பட்­டது. அப்­போதும் இவை காணப்­பட்­டன என்றும் பின்பு அப்­ப­டியே மூடப்­பட்டு பாதை அக­லப்­ப­டுத்­தப்­பட்­டது என்றும் வண. இரா­யப்பு ஜோசப் ஆண்­டகை குறிப்­பி­டு­கிறார்.
இப்­போதும் தோண்­டப்­பட்­டுள்ள பகுதி மேலும் ஆழ­மாக்­கப்­ப­டு­மே­யானால் மேலும் பல எலும்­புக்­கூ­டுகள் கிடைக்­க லாம் என்றும் கணிப்­புகள் குறிப்­பி­டு­கின்­றன. மனித உரிமைப் பேரவை மாநாடு நடை­பெ­ற­வுள்ள சந்­தர்ப்­பத்தில் அவை கண்­டு­பி­டிக்கப் பட்­டுள்­ள­தினால் விடயம் உட­னடி சர்­வ­தேச கவ­னத்­திற்குச் சென்­றுள்­ளது இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.
அதேநேரத்தில் இலங்கை வந்­துள்ள அமெ­ரிக்க இரா­ஜாங்க அமைச்சின் போர்க்­குற்ற விசா­ரணை நிபுணர் ஸ்டீபன் ஜே.ெரப் வடக்கில் பல தமிழ் அமைப்­பு­க­ளையும் சந்­தித்­துள்ளார். அவர்­களில் மன் னார் ஆயர் வண.இரா­யப்பு ஜோசப் ஆண்­டகை பல விப­ரங்­களை அவ­ரிடம் தெரி­வித்­துள்ளார்.
போரின் போது இடம்­பெற்ற குற்­றங்­க­ளாக அவை கணிக்­கப்­பட வேண்டும் என அவர் குறிப்­பிட்­டுள்ளார். தாம் அமெ­ரிக்க நிபு­ண­ரிடம் கூறிய விப­ரங்­களை சர்­வ­தேச ஊட­கங்­க­ளுக்கும் வண. இரா­யப்பு ஜோசப் தெரி­வித்­துள்ளார்.
போர்க்­கா­லத்தில் இலங்கை அரச விமா­னங்கள் மூன்று வித­மான குண்­டு­களை மக்கள் வாழ்ந்த பகு­தி­க­ளுக்குள் வீசி­யுள்­ளன. கொத்­துக்­குண்­டுகள் வீசப்­பட்­டன. அவை நிலத்தில் சிதறி விழுந்து மக்­க ளைப் பலி கொண்­டன.
இரண்­டா­வது வகை குண்டு நிலத்தில் விழு­வ­தற்கு முன்பே வெடித்துச் சிதறி பர­வ­லான தாக்­கு­தலை ஏற்­ப­டுத்தும். மூன்­றா­வ­தாக இர­சா­யன குண்­டு­களும் வீசப்­பட்­டுள்­ளன.
புதுக்­கு­டி­யி­ருப்பு, தர்­ம­புரம், புது­மாத்­தளன் மருத்­துவ விடு­திகள் போரின் இறு ­திக்­கால கட்­டத்தில் இரா­ணு­வத்தின் குண் டுத் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கின. இறுதி எட்டு மாதங்­களின் போது போரினால் பெருந்­தொ­கை­யான தமி­ழர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர் என்­பது புள்ளி விப­ரங்­களின் மூலம் தெரிய வரு­கின்­றது.
வண.இரா­யப்பு ஜோசப் சர்­வ­தேச ஊட­க­மொன்­றுக்கு வழங்­கிய செவ்­வியில் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். இதே­வே­ளை யில் பொறுப்­புக்­கூ­றுதல் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­துதல் போன்ற விட­யங்­களில் இலங்கை அரசு ஈடு­ப­டவே இல்­லை­யென்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் தெரி­வித்­துள்­ளது. சர்­வ­தேச விசா­ரணை போர்க்­குற்­றங்­க­ளுக்கு அவ­சி­ய­மெ­னக்­கு­றிப்­பிட்­டுள்ள தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு, தமி­ழர்­க­ளுக்­கான வாழ்­வா­தார பொறி­மு­றை­யொன்று அவ­சியம் என்­ப­தையும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.
அமெ­ரிக்க அதி­காரி சிறைக்குச் சென்று சில தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் அங்­கத்­த­வர்­க­ளையும் சந்­தித்­த­தாகக் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. ஆனால் அவர்­களின் பெயர் விப­ரங்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.
இலங்கை அர­சினால் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்டு வரும் காணி அப­க­ரிப்பு தொடர்­பாக சர்­வ­தேச கவ­ன­யீர்ப்புப் போராட்­டங்கள் இடம்­பெ­ற­வுள்­ளன. பிரித்­தா­னிய தமிழர் பேரவை இப்­பி­ரச்­சி­னையை உலகத் தமி­ழர்­களின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­துள்­ளது.
இம்­மாத இறு­தியில் காணி அப­க­ரிப்பு பிரச்­சி­னையை முன்வைத்து மாநா­டொன்று இடம்­பெ­ற­வுள்­ளது. லண்­டனில் நடை­பெறும் இம்­மா­நாட்­டிற்கு உல­கி­லுள்ள சகல தமிழ் அமைப்­புக்­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­ப­ட­வுள்­ளது.
அத்­துடன், சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள், சர்­வ­தேச தொண்டர் அமைப்பு என அரசு சாரா அமைப்­பு­க­ளுக் கும் அழைப்பு விடுக்­கப்­படும். தமிழ்ப் பகு­தி­களில் காணி அப­க­ரிப்பு மிகச் சிறந்த மூலோ­பா­யத்­துடன் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக பிரித்­தா­னிய தமிழர் பேரவை கரு­து­கின்­றது.
வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளி­லுள்ள தமி­ழர்கள் தங்கள் எல்­லை­களை நோக்கிச் செல்லாவிட்டால் அந்த எல்­லைகள் அவர்­களைத் தேடி வந்து விடும் என பேரவை கடு­மை­யான எச்­ச­ரிக்­கையை விடுத்­துள்­ளது.
காணி அப­க­ரிப்பு, சிங்­களக் குடி­யேற்றம் ஆகிய விப­ரங்­களை ஆதா­ரங்­க­ளுடன் பெறு­வதில் அது ஆர்வம் காட்டி வரு­கின்­றது. பிரித்­தா­னிய தமிழர் பேர­வை­யுடன் தொடர்பு கொண்டு தங்கள் பகுதி விப­ரங்­களை தரு­மாறு வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றனர்.
திட்­ட­மிட்டுத் தமி­ழர்கள் வாழும் பகு­தி­யி­லேயே அவர்­களை சிறு­பான்­மை­யி­ன­ராக மாற்­று­வ­தற்கு காணி அப­க­ரிப்பு மிகச் சிறந்த தந்­தி­ர­மாக பாவிக்­கப்­ப­டு­கின்­றது. இது குறித்து தாயகத் தமி­ழர்­களும் உலகத் தமி­ழர்­களும் விழிப்­புடன் செயற்­பட வேண்டும். அதிலும் அவ­ச­ர­மாகச் செயற்­பட வேண்டும்.
அதற்கு எதி­ராக தாய­கத்­திலும் புலம் பெயர் நாடு­க­ளிலும் ஒரே நேரத்தில் ஜன­நா­யக கவ­ன­யீர்ப்புப் போராட்­டங்கள் நடாத்­தப்­பட வேண்டும் என புலம் பெயர் ஊட­கங்­களில் பிரித்­தா­னிய தமிழர் பேரவை பிர­தி­நி­திகள் வேண்­டுகோள் விடுத்து வரு­கின்­றனர்.
அதற்­கான திட்­டங்­களை வகுப்­ப­தற்­கா­கவே லண்­டனில் தமிழர் மாநாடு கூட்­டப்­ப­ட­வுள்­ளது. மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லி­ருந்து தமிழர் காணி­களில் சிங்­க­ளவர் பல­வந்­த­மாகக் குடி­யேற்­றப்­பட்டு வரு­வ­தாக புலம்­பெயர் ஊட­கங்கள் தெரி­வித்து வரு­கின்­றன.
அங்­குள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மாகாண சபை உறுப்­பி­னர்கள் அது தொடர்­பான தக­வல்­களை வழங்கி வரு­கின்­றனர். வாகரை, கிரான் பகு­தி­களில் தமி­ழர்­களின் மேய்ச்சல் நிலக்­கா­ணி­களில் 8 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் திடீ­ரென நூற்­றுக்­க­ணக்­கான சிங்­களக் குடும்­பங்கள் குடி­யேற்­றப்­பட்­டுள்­ளன.
அதே­போன்று மட்­டக்­க­ளப்பு செங்­க­ல­டி­யிலும் தமிழ் விவ­சா­யி­களின் 5 ஆயிரம் ஏக்கர் மேய்ச்சல் நிலத்தை சிங்­க­ள­வ­ருக்கு வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது.
புத்த பிக்­கு­மாரின் தலை­மையின் கீழ் படை­யி­னரின் பாது­காப்­புடன் இந்தக் குடி­யேற்­றங்கள் நடை­பெ­ற­வுள்­ளன.
இது தொடர்­பாக கிழக்கு மாகாண சபை கூட்­ட­மைப்பு உறுப்­பினர் துரை­ரத்­தினம் மட்­டக்­க­ளப்பு அர­சாங்க அதி­ப­ரிடம் முறைப்­பாடு செய்­துள்ளார். தம்­மிடம் இது தொடர்­பான ஆதா­ரங்கள் உண்டு என்றும் அவர் குறிப்­பி­டு­கிறார்.
பிரித்­தா­னிய தமிழர் பேரவை இது போன்ற முறைப்­பா­டு­களை சேக­ரித்து வரு­கின்­றது. ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாட்டின்போது காணி அப­க­ரிப்பு தொடர்­பா­கவும் அறிக்கை ஒன்று தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளது.
இது ஓர் இன ஒடுக்கல் என பேரவை சுட்டிக் காட்டி வரு­கின்­றது. இருப்­பினும் அறிக்­கை­க­ளோடு மாத்­திரம் நின்று விடா மல் செய­லிலும் எதிர்ப்பு காட்­டப்­பட வேண்டும்.
மிக அவ­ச­ர­மாக அரசின் திட்டம் நிறுத்­தப்­பட வேண்டும் என்­பதே பிரித்­தா­னிய தமிழர் பேர­வையின் நோக்கம் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இம்­முறை அமெ­ரிக்கா இலங்கை அர­சுக்­கெ­தி­ராகத் தீர்­மானம் ஒன்றைக் கொண்­டு­வ­ர­வுள்ள நிலையில் காணி அப­க­ரிப்புப் பிரச்­சி­னையும் இல ங்கை அர­சுக்கு எதி­ரா­ன­தாக அமை­ய­வுள்­ளமை இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.
லோக்­சபா எனப்­படும் இந்­திய நாடா­ளு­மன்றத் தேர்தல் விரைவில் நடை­பெ­ற­ வுள்­ளது. உல­கி­லேயே மிகப் பெரிய ஜன­நா­யக நாடொன்றில் இடம்­பெறும் ஜன­
நா­யகத் தேர்தல் அது.
இந்தத் தேர்தல் உலகின் கவ­னத்தை கவர்ந்து வரு­வது வழ­மை­யா­னது. பல நாடுகள் இந்­தியத் தேர்­தலை உன்­னிப்­பாக உற்று நோக்­கு­கின்­றன.
ஆனால், வழ­மைக்கு மாறாக உலகத் தமி­ழர்கள் இம்­முறை நடை­பெ­ற­வுள்ள இந்­தியத் தேர்­தலை அவ­தா­னிக்க ஆரம்­பித்­துள்­ளார்கள். புலம்­பெயர் தமிழ் ஊட­கங்­களில் இந்தத் தேர்தல் தொடர்­பான கருத்­துக்­களும் கணிப்­பு­களும் வெளி­வர ஆரம்­பித்­துள்­ளன.
இது வழ­மைக்கு மாறா­னது, அவ்­வா­றான ஈடு­பாடு எதனால் வந்­தது? ஈழத் தமி­ழர்­க­ளுக்கும் இந்­தியத் தேர்­த­லுக்கும் உள்ள தொடர்பு என்ன?
இக்­கேள்­வி­க­ளுக்கு ஒரே வரியில் பதில் கூற முடி­யாது. ஆனால் 2009 ஆம் ஆண்டு ஈழத் தமி­ழ­ருக்கு ஏற்­பட்ட அவலம் இங்கு முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது.
அதில் இந்­திய ஆட்­சியில் இருந்த காங்­கிரஸ் கட்­சிக்கும் முக்­கிய வகி­பாகம் இருப்­ப­தாகப் பின்பு வெளி­யான செய்­தி கள் தெரி­விக்­கின்­றன. ஆனால் போர் நடை­பெற்ற போது இது தொடர்­பான எந் தத் தக­வலும் வெளி­யாகவில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
அக்­கால கட்­டத்தில் இந்­திய மக்கள் ஈழத்துப் போரில் இந்­தியா தலை­யிட்­டது தொடர்­பாக எதுவும் அறிந்­தி­ருக்­க­ வில்லை. உண்மைச் செய்­திகள் வெளி­வ­ரா­த­வாறு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் இந்­தியச் செய்­திகள் குறிப்­பி­டு­கின்­றன.
2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்­திய லோக்­ச­பா­வுக்­கான தேர்தல் இடம்­பெற்­றது. அதனால் தேர்தல் பாதிப்­புகள் இடம்­பெ­றா­வண்ணம் சோனியா காந்தி தலை­மை­யி­லான காங்­கிரஸ் கட்சி போர்ச் செய்­தி­களை கட்­டுப்­ப­டுத்தி இருந்­தது.
இதனை இந்­திய ஊட­கங்கள் பல வெளி­யிட்­டி­ருந்­தமை இங்கு குறிப்­பி­டத்­தக்­கது. அத­னால்தான் அந்தத் தேர்­தலில் காங்­கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடிந்­தது என்றும் ஆய்­வா­ளர் கள் குறிப்­பிட்­டி­ருந்­தனர்.
ஆனால், இரண்டு ஆண்­டு­களின் பின் அதா­வது 2011 ஆம் ஆண்டு இடம்­பெற்ற தமிழ் நாடு சட்ட சபைத் தேர்­தலின் போது மக்கள் உண்­மை­களைக் கண்­ட­றிந்­தி­ருந்­தனர். அதனால் காங்­கிரஸ் கட்­சியும் அதன் கூட்­டணிக் கட்­சி­யான தி.மு.க. வும் படு­தோல்வி அடைந்­ததை அனை­வரும் அறிவர். எனவே, இந்­திய தேர்­தலில் ஈழத்­த­மிழர் பிரச்­சி­னையும் கணி­ச­மான பங்கு வகிக்­ கின்­றது என்­பது ஓர் இரகசியமான விடய மல்ல.
ஆனால், நிலைமை இவ்வாறிருக்க நிதி அமைச்சர் சிதம்பரம் தமிழ் நாட்டு மக்களிடம் இப்போது ஈழப்போர் குறித்து சில தகவல்களை குறிப்பிட்டு வருகிறார்.
போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவ் வாறு அமைச்சர் சிதம்பரம் தேர்தல் பரப் புரைகளில் குறிப்பிட்டு வருகிறார்.
ஆனால், உண்மை நிலை அதுவல்ல என்பதை பலரும் குறிப்பிட்டு வருகிறார் கள். அதிலும் அவர் நான்கு ஆண்டுகளின் பின்பே இதனை தெரிவித்து வருகிறார்.
வீ.ஆர்.வர­த­ராஜா
(ஊட­க­வி­ய­லாளர் - ஜேர்­மனி)
« PREV
NEXT »

No comments