இலங்கையில் தமிழ் சி.என்.என் இணையத்தளம் தடை செய்யப்பட்டமை தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள், இலங்கை அரசின் இந்த செயலை உலக சமுதாயம் கண்டிப்பதற்கு முன்வர வேண்டும். என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பழ நெடுமாறன்,
தமிழ் சி.என்.என் செய்தி இணையத்தளத்தை இலங்கையில் ராஜபக்ஸ அரசு தடை செய்து இருக்கின்றது.
தொடர்ந்து ஊடகங்களை ஒடுக்கி தனக்கு எதிரான குரல் எழாதபடி ராஜபக்ஸ தொடர்ந்து செய்து வருகின்றார்.
உலக சமுதாயம் இதனைக் கண்டிப்பதற்கு முன்வர வேண்டும்.
ஏனென்று சொன்னால் இலங்கையில் உள்ள தமிழர்களை மட்டுமல்ல சிங்களவர்களையும் இருட்டில் வைப்பதற்கு ராஜபக்ஸ முயற்சி செய்கிறார். இவ்வாறு தெரிவித்தார்.
No comments
Post a Comment