அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களை கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே ரெப் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் இலங்கை வந்தடைந்தார்.
இன்று இலங்கையை வந்தடைந்த ஸ்டீபன் ஜே ரெப் எதிர்வரும் 11 ஆம் திகதி சனிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருப்பார் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஸ்டீபன் ஜே ரெப் இலங்கைக்கு மேற்கொள்ளும் இந்த விஜயம் அவருடைய இரண்டாவது விஜயமாகும். கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தின்போது ஸ்டீபன் ஜே ரெப் அரசாங்க உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினர், நீதித்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
குறிப்பாக யுத்தத்தின் பின்னரான இலங்கையில் நிலைமைகள் நல்லிணக்க செயற்பாடுகள் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஸ்டீபன் ஜே ரெப் தனது இலங்கை விஜயத்தின் போது ஆராய்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் ஸ்டீபன் ஜே ரெப்பின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.
கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று இலங்கையை வந்தடைந்த ஸ்டீபன் ஜே ரெப் எதிர்வரும் 11 ஆம் திகதி சனிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருப்பார் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஸ்டீபன் ஜே ரெப் இலங்கைக்கு மேற்கொள்ளும் இந்த விஜயம் அவருடைய இரண்டாவது விஜயமாகும். கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தின்போது ஸ்டீபன் ஜே ரெப் அரசாங்க உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினர், நீதித்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
குறிப்பாக யுத்தத்தின் பின்னரான இலங்கையில் நிலைமைகள் நல்லிணக்க செயற்பாடுகள் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஸ்டீபன் ஜே ரெப் தனது இலங்கை விஜயத்தின் போது ஆராய்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் ஸ்டீபன் ஜே ரெப்பின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.
கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment